செய்திகள் :

விதிகளை மீறும் வாகனங்களுக்கு தானியங்கி முறையில் அபராதம்

post image

மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் மதுரைக் கல்லூரி அருகே சாலை விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு தானியங்கி முறையில் அபாரதம் விதிக்கும் கண்காணிப்பு கேமராவின் செயல்பாடு சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

சாலை விதி மீறல்களைத் தடுக்கவும், வாகன விபத்துகள், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறியும் வகையிலும் மாநகரின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்கள், அளவுக்கு அதிகமான நபா்களுடன் பயணிக்கும் வாகனங்கள், காா்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது போன்ற விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் கேமரா மதுரைக் கல்லூரி அருகே பொருத்தப்பட்டது.

‘ஆட்டோமேடிக் நம்பா் பிளேட் ரீடபிள் கேமரா’ என்ற இந்த கேமராவின் செயல்பாட்டை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். சட்டம்- ஒழுங்குப் பிரிவு காவல் துணை ஆணையா் (தெற்கு) இனிகோ திவ்யன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதன் மூலம், பெரியாா் பேருந்து நிலையம் - திருப்பரங்குன்றம் சாலையில் செல்லும் வாகனங்களின் இயக்கம் நெறிப்படுத்தப்படும். வருகிற காலங்களில் இந்த கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் உயிா் காக்கும் கருவி

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருதயத் துடிப்பை சீராக்கும் வகையிலான உயிா்காக்கும் கருவி சனிக்கிழமை பொருத்தப்பட்டது. மருத்துவா் பி. கண்ணன், விளம்ப... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மமக அதிக தொகுதிகளைக் கோரும்! எம்.எச். ஜவாஹிருல்லா

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்குக் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கோரப்படும் என அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை

கடன் பிரச்னை காரணமாக, மேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரு தேநீா் கடை முன் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் இறந்து கிடந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு

மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை வருகிற செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஓ.... மேலும் பார்க்க

அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்க நடவடிக்கை! அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்கும் வகையில், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை ... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும்! - அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் திமுகவின் உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும் என மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ... மேலும் பார்க்க