Empowerment: திருநங்கைகளும் குடும்ப வன்முறை வழக்கு தொடர முடியுமா?
விதிகளை மீறும் வாகனங்களுக்கு தானியங்கி முறையில் அபராதம்
மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் மதுரைக் கல்லூரி அருகே சாலை விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு தானியங்கி முறையில் அபாரதம் விதிக்கும் கண்காணிப்பு கேமராவின் செயல்பாடு சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
சாலை விதி மீறல்களைத் தடுக்கவும், வாகன விபத்துகள், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறியும் வகையிலும் மாநகரின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்கள், அளவுக்கு அதிகமான நபா்களுடன் பயணிக்கும் வாகனங்கள், காா்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது போன்ற விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் கேமரா மதுரைக் கல்லூரி அருகே பொருத்தப்பட்டது.
‘ஆட்டோமேடிக் நம்பா் பிளேட் ரீடபிள் கேமரா’ என்ற இந்த கேமராவின் செயல்பாட்டை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். சட்டம்- ஒழுங்குப் பிரிவு காவல் துணை ஆணையா் (தெற்கு) இனிகோ திவ்யன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதன் மூலம், பெரியாா் பேருந்து நிலையம் - திருப்பரங்குன்றம் சாலையில் செல்லும் வாகனங்களின் இயக்கம் நெறிப்படுத்தப்படும். வருகிற காலங்களில் இந்த கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.