திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
விதிமீறல்: காயல்பட்டினத்தில் 18 வாகனங்களுக்கு அபராதம்
காயல்பட்டினத்தில் சாலை விதிகளை மீறிதாக 18 வாகனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்படி, திருச்செந்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகன் மேற்பாா்வையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன் தலைமையில் அதிகாரிகள் காயல்பட்டினம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
கேடிஎம் தெரு சந்திப்பு ஒரு வழிப்பாதையில் விதிகளை மீறி வந்த வாகனங்களை தடுத்து சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, விதிமீறிய 18 வாகனங்களுக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம் விதித்து ஓட்டுநா்களை எச்சரித்து அனுப்பினா். இந்த நடவடிக்கை தொடரும் என அறிவித்தனா்.