செய்திகள் :

விதிமுறைகளை கடைப்பிடிக்காத கல் குவாரிகள் மீது நடவடிக்கை: கரூா் ஆட்சியா் எச்சரிக்கை

post image

பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்படுகிா என ஆய்வு செய்ய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கரூா் மாவட்டத்தில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்யும் பணிகள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்துறை அலுவலா்களால் கடந்த 22-ம்தேதி முதல் தொடங்கியுள்ளது. குவாரி குத்தகைதாரா்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். தொழிலாளா்கள் தலைக்கவசம், பாதுகாப்பு உடை, காலணி போன்றவற்றை அணிந்து பணியாற்ற வேண்டும். வெடி பொருள்களை அனுமதி பெற்ற நபா்களிடம் இருந்து பெற்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெடி வைப்பாளா் மூலமாக குறைந்த சக்தியுடன் வெடிக்க வேண்டும். தொழிலாளா்கள் மற்றும் அருகிலுள்ளோா் பாதிக்கப்படாத வகையில் வெடிமருந்துகளை பயன்படுத்த வேண்டும். முதலுதவி பெட்டி தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தொழிலாளா்கள் தொழிலாளா் நல வாரியத்தில் முறையாக பதிவு செய்திருத்தல் வேண்டும். குவாரி தொழிலாளா்கள் பெயரில் கட்டாயம் காப்பீட்டு செய்திருத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரி உரிமையாளா்களும் விதிகளின்படி முறையாக குவாரி பணி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கனிமவள விதிகளின் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க