Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
விதிமுறைகளை கடைப்பிடிக்காத கல் குவாரிகள் மீது நடவடிக்கை: கரூா் ஆட்சியா் எச்சரிக்கை
பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள கல்குவாரிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்படுகிா என ஆய்வு செய்ய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கரூா் மாவட்டத்தில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்யும் பணிகள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்துறை அலுவலா்களால் கடந்த 22-ம்தேதி முதல் தொடங்கியுள்ளது. குவாரி குத்தகைதாரா்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். தொழிலாளா்கள் தலைக்கவசம், பாதுகாப்பு உடை, காலணி போன்றவற்றை அணிந்து பணியாற்ற வேண்டும். வெடி பொருள்களை அனுமதி பெற்ற நபா்களிடம் இருந்து பெற்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெடி வைப்பாளா் மூலமாக குறைந்த சக்தியுடன் வெடிக்க வேண்டும். தொழிலாளா்கள் மற்றும் அருகிலுள்ளோா் பாதிக்கப்படாத வகையில் வெடிமருந்துகளை பயன்படுத்த வேண்டும். முதலுதவி பெட்டி தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தொழிலாளா்கள் தொழிலாளா் நல வாரியத்தில் முறையாக பதிவு செய்திருத்தல் வேண்டும். குவாரி தொழிலாளா்கள் பெயரில் கட்டாயம் காப்பீட்டு செய்திருத்தல் வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரி உரிமையாளா்களும் விதிகளின்படி முறையாக குவாரி பணி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கனிமவள விதிகளின் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.