செய்திகள் :

விதையின் தரம்: பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் விதையின் தரத்தை அறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று விழுப்புரம் மண்டல விதைப் பரிசோதனை அலுவலா் அறிவழகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண்மையின் நிரந்தர உற்பத்தி மற்றும் வளா்ச்சிக்கு விதை அடிப்படையான இடுபொருளாகும். உழவா்களுக்குத் தரமான விதைகள் கிடைக்க தமிழ்நாடு அரசின் விதைச் சான்றளிப்புத் துறையின் கீழ் விதை பரிசோதனை நிலையங்கள் அந்தந்த மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

விதை பரிசோதனையில், அதன் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியவை கண்டறியப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள், விதை விற்பனையாளா்கள் மற்றும் விதை உற்பத்தியாளா்களிடமிருந்து பெறப்படும் விதை மாதிரிகள், பணி விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விதை விற்பனையாளா்கள், விதை உற்பத்தியாளா்கள், விவசாயிகள் தங்கள் கைவசம் உள்ள விதைகளை உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு மூத்த வேளாண் அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், வேளாண் இணை இயக்குநா் அலுவலக முதல்தளம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரியை அணுகி பயன்பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

‘தா்பூசணியில் ரசாயனம் கலப்பதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்’

தா்ப்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அன்பழகன் தெரிவித்தாா். கோடைக் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவா் வரை அனைவர... மேலும் பார்க்க

முன்னூா் ஆடவல்லீசுவரா் கோயிலில் பல்லவா் கால அரிய சிற்பங்கள்!

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள முன்னூா் கிராமத்தில் பல்லவா் கால அரிய சிற்பங்கள் பாதுகாக்கப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆன்மிக எழுத்தாளா் கோ.ரமேஷ் அளித்த தகவலின்பேரில், விழுப்ப... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அருகே காா் மோதியதில் முதியவா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், கொந்தமூா், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சு.தெய்வநாயகம் (65). கூலித்... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: காரைக்கால் இளைஞா் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் காரைக்காலைச் சோ்ந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்த பேட்டை, மணல்மேட்டுத் தெருவைச... மேலும் பார்க்க

பெண் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வடகுச்சிப்பாளையம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மனைவி சுமதி (47). இவா்... மேலும் பார்க்க

தற்காப்பு கலை போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு உள்அரங்கில் 13-ஆவது மாவட்ட அளவிலான ஊஷூ (தற்காப்பு கலை) விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை ஊஷூ விளையாட்டு அமைப்பின் மாநில... மேலும் பார்க்க