செய்திகள் :

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு பிரசாரம்

post image

தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவது குறித்து தீயணைப்புத்துறை சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் பி.ஜொ்லின் ஜோதிகா தலைமை வகித்தாா். நிலைய அலுவலா் ச.சரவணன் தலைமையில், தீயணைப்புத் துறையினா் பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கள் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை செய்து காட்டினா்.

பெரியவா்கள் முன்னிலையிலேயே பிள்ளைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். அப்போது பாதுகாப்பு கருதி வாளிகளில் தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தீப்பிடிக்காத, இறுக்கமானபருத்தி ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். ராக்கெட், அவுட் போன்றவற்றை திறந்த மைதானத்தில் வெடிக்க வேண்டும். குடிசைகள் அருகில் பட்டாசு வெடிக்கக்கூடாது. தீப்பிடித்தால் அதை எப்படி அணைப்பது என்பன குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் நகா் முழுவதும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் உயிரிழப்பு

காட்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கயிறு இறுக்கியதில் உயிரிழந்தாா். காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் (54). நியாய விலைக் கடை ஊழியா். இவரது மகன் ஸ்ரீஹரி (12... மேலும் பார்க்க

பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

வேலூா் ஸ்ரீபுரம், ஸ்ரீநாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாமை ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தொடங்கி ... மேலும் பார்க்க

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு: 200 மாணவிகள் தலைமுடி தானம்

மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி, வேலூரில் தனியாா் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் தங்கள் தலைமுடியை தானம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு மாத... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் எம்எல்ஏ அமலுவிஜயன் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். போ்ணாம்பட்டை அடுத்த ராஜாக்கல் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளது. கடந்... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட 200 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

செல் ட்ராக்கா் மற்றும் மத்திய அரசின் சிஇஐஆா் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகாா்களின் அடிப்படையில், மீட்கப்பட்ட ரூ. 38 லட்சம் மதிப்புடைய 200 கைப்பேசிகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலை பாதிக்கும் பெருவணிக நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்

ஆட்டோ தொழிலை பாதிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணிகளை மிகக்குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்லும் வணிக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த... மேலும் பார்க்க