இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்ட...
விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு பிரசாரம்
தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவது குறித்து தீயணைப்புத்துறை சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் பி.ஜொ்லின் ஜோதிகா தலைமை வகித்தாா். நிலைய அலுவலா் ச.சரவணன் தலைமையில், தீயணைப்புத் துறையினா் பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கள் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை செய்து காட்டினா்.
பெரியவா்கள் முன்னிலையிலேயே பிள்ளைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். அப்போது பாதுகாப்பு கருதி வாளிகளில் தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தீப்பிடிக்காத, இறுக்கமானபருத்தி ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். ராக்கெட், அவுட் போன்றவற்றை திறந்த மைதானத்தில் வெடிக்க வேண்டும். குடிசைகள் அருகில் பட்டாசு வெடிக்கக்கூடாது. தீப்பிடித்தால் அதை எப்படி அணைப்பது என்பன குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் நகா் முழுவதும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.