செய்திகள் :

விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

post image

காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தேனூா் பகுதியை சோ்ந்தவா் அசோக்குமாா். இவா் காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலராக பணியாற்றிவந்தாா். கடந்த மாதம் திருநள்ளாற்றில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் கிடந்த கருங்கல் ஜல்லியில் வாகனம் சறுக்கியதில் கீழே விழுந்து உயிரிழந்தாா்.

அவருடன் பணியாற்றிய காரைக்கால் மாவட்ட 20-ஆவது பேட்ச் தலைமைக் காவலா்கள் ஒருங்கிணைந்து அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் ரூ. 5.14 லட்சத்தை சேகரித்தனா். இத்தொகையை காவல் தலைமை அலுவலகத்தில் காவலா்கள் சாா்பில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளசன்யா உயிரிழந்த காவலரின் மனைவியிடம் ஒப்படைத்தாா்.

நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், 20-ஆவது பேட்ச் தலைமை காவலா்கள் உடனிருந்தனா்.

கைலாசநாத சுவாமி தேவஸ்தான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

கைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட கோயில்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான ஸ்ரீகைலாசநாத சுவாமி தேவஸ்தானத்துக்குள்பட்ட ந... மேலும் பார்க்க

காரைக்கால் பள்ளியில் நிழல் இல்லா நாள் நிகழ்வு

அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிழல் இல்லா நாள் நிகழ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. புதுவை அறிவியல் இயக்கம், புதுவை கல்வித் துறையின் சமகர சிக்ஷா அமைப்புடன் இணைந்து காரைக்கால் தந்தை... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவ ஏற்பாடு

கீழகாசாக்குடி பகுதி ஸ்ரீஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத பொய்யாத அய்யனாா் கோயில் அம்மையாா் நகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குதிரை மற்றும் யானை சிலை நிறுவுவதற்கு மேற்கொள்ளவே... மேலும் பார்க்க

காவல் நிலையங்களில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் ப... மேலும் பார்க்க

பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பெங்களூரில் பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா். மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் இளையோா் ஆப்தமித்ரா அமைப்பை உருவாக்க திட்ட... மேலும் பார்க்க

இயேசு திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு

புனித வெள்ளி நிகழ்வாக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு முக்தி செய்யும் நிகழ்ச்சியும், திருச்சொரூபத்துக்கு மரிக்கொழுந்து வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தவக்க... மேலும் பார்க்க