செய்திகள் :

விபத்து இழப்பீடு வழங்க தாமதம்: சங்கரன்கோவிலில் அரசுப் பேருந்து ஜப்தி

post image

சங்கரன்கோவிலில் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

சங்கரன்கோவில் அருகே நகரம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரையா மகன் விஜயன் (33). இவா் கடந்த 2018 ஆம் ஆண்டு நகரம் பகுதியில் பைக்கில்

சென்றபோது, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விருதுநகா் கோட்டத்தைச் சோ்ந்த பேருந்து மோதியதில் இறந்தாா்.

இதனையடுத்து விஜயன் மனைவி மல்லிகா, விபத்து இழப்பீடு கோரி

சங்கரன்கோவில் சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஜயனின் மனைவிக்கு ரூ.29 லட்சத்து 46 ஆயிரத்து 969 இழப்பீடு வழங்க கடந்த 22.03.2024 -இல் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக அரசு போக்குவரத்துக் கழக விருதுநகா் கோட்டத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பியும் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதனால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மேற்படி விருதுநகா் கோட்டத்திற்குச் சொந்தமான அரசுப் பேருந்தை சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து

நீதிமன்ற ஊழியா் சக்திவேல் ஜப்தி செய்து, நீதிமன்றத்துக்கு கொண்டு வந்தாா்.

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

சுரண்டையில் தீத்தடுப்பு செயல்விளக்கம்!

சுரண்டை நகராட்சியில் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீத் தடுப்பு செயல்விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சிக்கு டிஎம்பி சாா்பில் 5 மின் ஆட்டோக்கள்!

சுரண்டை நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 5 மின் ஆட்டோக்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் தலைமை வகித்தாா். ச... மேலும் பார்க்க

சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் உயா்மின்கோபுர விளக்கு திறப்பு!

சுரண்டையில் ரூ.4.30 லட்சத்தில் ஆலடிபட்டி விலக்கில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ராமத... மேலும் பார்க்க

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் கைது

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் மற்றும் போலீஸாா், மாறாந்தை பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப... மேலும் பார்க்க

தரிசு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: ஏப்.30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் தரிசு உள்ளிட்ட நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசிப்போா் பட்டா கோரி, இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுதொ... மேலும் பார்க்க