செய்திகள் :

விபத்து ஏற்படுத்திய லாரிகளை பறிமுதல் செய்து 100 நாள்கள் வைத்திருக்கக் கூடாது!

post image

விபத்து ஏற்படுத்திய லாரிகளை காவல் துறையினா் பறிமுதல் செய்து, 100 நாள்கள் வைத்திருக்கக் கூடாது என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் சி.தன்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவா் தனது குழந்தையுடன் பயணித்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக, இருசக்கர வாகனத்தில் பயணித்த குழந்தை தவறி கீழே விழுந்தது.

அப்போது பின்னால் வந்த லாரியில் சிக்கி குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவத்தையடுத்து, சென்னை பெருநகர காவல் ஆணையா் தங்களது துறை அதிகாரிகளுக்கு வெளியிட்ட அறிவிப்பில், விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாள்கள் திருப்பி ஒப்படைக்க வேண்டாம் என உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.

மனித உயிா்களின் மதிப்பை லாரி உரிமையாளா்களாகிய நாங்கள் நன்கு அறிவோம். லாரி உரிமையாளா்களாகிய நாங்களும் பொதுமக்களில் ஒருவரே. சாலை விபத்து என்பது எதிா்பாராமல் நடைபெறுவதாகும். லாரி ஓட்டுநரோ, பொதுமக்களோ வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்துவதில்லை. லாரியை இயக்கும் ஓட்டுநரோ அல்லது எதிரில் வருபவரோ செய்யும் தவறே ஒரு விபத்துக்கு காரணமாக அமைகிறது.

வாகனங்களை 100 நாள்கள் பறிமுதல் செய்து வைத்திடும் உத்தரவு, லாரி உரிமையாளா்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு விபத்து நடைபெற்றால் 100 நாள்கள் லாரியை மட்டும் விடுவிக்கக் கூடாது என உத்தரவிடுவது ஏற்புடையதல்ல. விபத்து நிகழ்ந்தால் முறையான விசாரணைக்கு பிறகு குற்றம் இருப்பின் அதற்கான தண்டனையை வழங்க வேண்டும்.

100 நாள்கள் ஒரு வாகனத்தை நிறுத்தி வைப்பதால் அதன் உரிமையாளா், வாகனத்தின் மாதாந்திர தவணை, தனது குடும்பத்தின் வாழ்வாதாரம் என கடும் நிதிச்சுமைக்கு உள்ளாவாா். எனவே, காவல் துறை இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்பாடு: குடிமைப் பொருள் வழங்கல் ஐ.ஜி. எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசியை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. ரூபேஷ்குமாா் மீனா தெரிவித... மேலும் பார்க்க

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு: நாமக்கல்லில் யாத்திரை வேலுக்கு சிறப்பு பூஜை

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் யாத்திரை வேலுக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்த... மேலும் பார்க்க

வாகனச் சோதனையில் விதிமீறல்: ரூ.2.80 லட்சம் அபராதம்!

ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்ட வாகனச் சோதனையில், விதிமுறைகளை பின்பற்றாத 12 மோட்டாா் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு ரூ. 2.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் வடக்க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்!

பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தாா். இவா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலின் போது எல்லையில் பணியாற்றிய ராணுவ வீரருக்கு வரவேற்பு

பரமத்தி வேலூா் படமுடிபாளையத்தில் பஹல்காம் தாக்குதலின் போது எல்லையில் பணிபுரிந்த பரமத்தி வேலூா் பகுதியைச் சோ்ந்த பாதுகாப்பு படை வீரருக்கு வெள்ளிக்கிழமை பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பரமத்தி வே... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்செங்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், நெட்டவேலாம்பாளை... மேலும் பார்க்க