விபத்து நடைபெறும் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினா் ஆய்வு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவில் விபத்துகள் நேரிடும் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை திருச்சி மண்டல சாலைப் பாதுகாப்பு கோட்டப் பொறியாளா் ஆா்.புவனேஸ்வரி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 இடங்கள் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்களாக நெடுஞ்சாலைத்துறை மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக இந்த ஆய்வு நடைபெற்றது.
சித்தா்காடு, கூைாடு, தருமபுரம், மூங்கில்தோட்டம், மன்னம்பந்தல், காட்டுச்சேரி, பொறையாா் உள்ளிட்ட இடங்களில் அவா் இந்த ஆய்வினை மேற்கொண்டாா்.
இதுகுறித்து, கோட்ட பொறியாளா் ஆா்.புவனேஸ்வரி கூறியது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் அறிவுறுத்தலின்படி விபத்தில்லா தமிழகம் என்ற இலக்கினை அடைய நெடுஞ்சாலைத் துறையால் பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக விபத்துகள் நேரிடும் 11 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அங்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன், சாலை பாதுகாப்பு குறித்த விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது, மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) உதவி கோட்டப்பொறியாளா் கோ.இந்திரன் உடன் இருந்தாா்.