செய்திகள் :

விப்ரோ நிறுவனரிடம் உதவிக் கோரும் கர்நாடக முதல்வர்!

post image

பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவிக் கோரி, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் நிலவும் மோசமான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, விப்ரோ வளாகத்தின் ஒரு பகுதியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா, விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றி, அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

“வெளிவட்டச் சாலையில் ஐபிளர் சந்திப்பு அருகில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலால், நகர வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது.

இதனால், விப்ரோ வளாகத்தின் ஒரு பகுதியின் வழியாகக் குறிப்பிட்ட வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். இதற்காக, அரசு அதிகாரிகளுடன் இணைந்து விப்ரோ குழுவினர் ஒரு திட்டம் வகுக்க வேண்டும்.

முதற்கட்ட ஆய்வுகளின் மூலம், வெளிவட்டச் சாலைகளின் சந்திப்புகளில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலை சுமார் 30 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்” என அவர் கூறியுள்ளார்.

பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பெங்களூரு நகரத்தில், வேலை நேரங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலால், லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வரி ஏய்ப்பு புகார்: துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்!

Karnataka Chief Minister Siddaramaiah has written a letter to Wipro Chairman Azim Premji to help control traffic congestion in Bengaluru.

எச்1பி விசா கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? வைரலாகும் பெண்ணின் பதிவு!

எச்1பி விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.விசா கட்டண உயர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் ம... மேலும் பார்க்க

வளர்ப்பு நாயின் நகம் பட்டு உடலில் காயம்: ரேபிஸ் தொற்றால் காவல்துறை ஆய்வாளர் உயிரிழப்பு!

வளர்ப்பு நாய்கள் நகத்தால் சீண்டினாலும் ரேபிஸ் வரலாம்; ஆகவே, எச்சரிக்கை அவசியம் என்பதை அண்மையில் குஜராத்தில் நிகழ்ந்ததொரு துயர சம்பவம் எடுத்துரைக்கிறது.குஜராத் காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றிய வன்ரா... மேலும் பார்க்க

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம் கான் விடுதலை!

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம் கான் 23 மாதங்களுக்குப் பின் இன்று (செப். 23) சீதாபூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.மூத்த தலைவர் ஆசாம் கான் சீதாபூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். க... மேலும் பார்க்க

ராகுலின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்; பாஜகவினர் அல்ல! சரத் பவார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டுமே தவிர, பாஜகவினர் அல்ல என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

சமூகங்களுக்கிடையே வேறுபாடுகளைக் களைய முதல்வர் முன்வர வேண்டும்: சரத் பவார்!

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இடஒதுக்கீடு மோதலுக்கு மத்தியில், பல்வேறு சமூகங்களுக்கிடையேயான பிரச்னையைத் தீர்ப்பதில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலை வகிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ச... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா! மின்சாரம் பாய்ந்து 7 பேர் பலி!

கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவுமுதல் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தா... மேலும் பார்க்க