செய்திகள் :

விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

post image

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது.

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் போயிங் விமானம் 242 பயணிகளுடன் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாது. இதில், 241 பேரும் பலியாகினர். ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த நிலையில்தான், 10 நிமிடம் தாமதமாக வந்ததால், விமைன நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால், விமானத்தை தவறவிட்டு நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார் பூமி சௌகான் என்ற இளம்பெண்.

நுழைவுச் சீட்டுகளை பரிசோதனை செய்யும் இடத்துக்கு 10 நிமிடம் தாமதமாக வந்ததால், என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அவரை உள்ளே அனுப்பினால், விமானம் புறப்படத் தாமதமாகும் என்று சொல்லிவிட்டார்கள். அகமதாபாத் சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் என்னால் உரிய நேரத்துக்கு விமான நிலையம் வர முடியாமல் போனது. எவ்வளவோ கெஞ்சியும் பாதுகாவலர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. நான் விமான நிலையத்திலேயே செய்வதறியாது நின்றுகொண்டிருந்தேன்.

ஆனால், விமானம் விபத்துக்குள்ளானதாகக் கேட்டபோது, என்னால் என்ன நடக்கிறது என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு நிமிடம் ஆடிப்போனேன் என்கிறார் பூமி.

அவர் விமான நிலையத்துக்குப்போகும்போது, அவளது குழந்தையை, தனது தாயிடம் விட்டுச் சென்றிருக்கிறார். இது பற்றி அவரது தாயார் கூறுகையில், அவள் குழந்தையால்தான் இன்று அவர் உயிருடன் இருக்கிறார் என்றும், எல்லாம் கடவுளின் செயல் என்றும், தனது மகள் உயிர் பிழைத்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறார்கள். ஆனால், நடந்திருப்பது மிகவும் துயரமான சம்பவம் என்றும் கூறியுள்ளார்.

இது பற்றி அவரது தந்தை கூறுகையில், எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோதே, விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறினார்கள். நாங்கள் அதிர்ந்துவிட்டோம் என்கிறார்.

அகமதாபாத் விமான விபத்து: எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் தேவை -பிரியங்கா

வயநாடு: அகமதாபாத் விமான விபத்து குறித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி எதிர்காலத்தில் தவறுகள் நிகழக் கூடாது என்று தெரிவித்தார். இந்த நிலையில், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான பிரியங்கா... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: என்கவுன்டரில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

மத்தியப் பிரதேசத்தில், பாலகாட் மாவட்டத்தில் உள்ள பச்சாமா தாதர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பெண்கள் உள்பட நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.பாலகாட் காவல் க... மேலும் பார்க்க

கர்நாடகம்: பைக் டாக்ஸி சேவைகள் அனைத்தும் நிறுத்தம் - ஜூன் 16முதல் இயங்காது!

பெங்களூரு: பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் பைக் டாக்ஸிகள் இனி இயங்காது. அம்மாநிலத்தில் பைக் டாக்ஸிகள் இயக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை(ஜூன் 15) நள்ளிரவுமுதல் அமலாகிறது. நாடெங்கிலும் பைக் டாக்ஸ... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்

அகமதாபாத் விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை காங்கிரஸ்... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! களத்தில் பிரிட்டன் விசாரணைக் குழு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில் பிரிட்டன் நாட்டு விசாரணைக் குழுவும் இடம்பெறுவதாக அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 245 பேர் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் விடிய விடிய சோதனை: ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினரின் தீவிர சோதனையில் சட்டவிரோதமாக வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 13 இரவு தொடங்கி ஜூன் 14 காலை வரையில் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் காவல் துற... மேலும் பார்க்க