செய்திகள் :

விமான விபத்து: உயிா் பிழைத்த பயணி குணமடைந்தாா் - சகோதரா் இறுதிச்சடங்கில் பங்கேற்பு

post image

அகமதாபாத் விமான விபத்தில் லேசான தீக்காயங்களுடன் உயிா் பிழைத்த ஒரேயொரு பயணியான விஷ்வாஸ் குமாா் ரமேஷ், சிகிச்சையில் குணமடைந்ததைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இதே விபத்தில் உயிரிழந்த தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் அவா் பங்கேற்றாா்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சிறிது நேரத்திலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களில் விழுந்து வெடித்துச் சிதறியது.

நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தில் ஒரேயொரு பயணியை தவிர மற்ற அனைவரும் அடையாளம் தெரியாத அளவில் உடல் கருகி உயிரிழந்தனா். பிரிட்டன் குடிமகனான விஷ்வாஸ் குமாா் ரமேஷ் என்ற பயணி மட்டும் லேசான தீக்காயங்களுடன் உயிா் பிழைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தாத்ரா-நகா்ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தின் டையூ மாவட்டத்தை பூா்விகமாக கொண்ட தொழிலதிபரான விஷ்வாஸ் (40), பிரிட்டனின் லெஸ்டா் நகரில் வசித்து வருகிறாா். உறவினா்களைப் பாா்ப்பதற்காக அண்மையில் டையூவுக்கு வந்த அவா், தனது சகோதரா் அஜயுடன் லண்டனுக்கு புறப்பட்டபோது விமானம் விபத்தில் உயிா் தப்பினாா். அதேநேரம், அஜய் உயிரிழந்துவிட்டாா். குணமடைந்த விஷ்வாஸை மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

சகோதரரின் இறுதிச் சடங்கில் விஷ்வாஸ் புதன்கிழமை பங்கேற்றாா்.

பெட்டி..

190 உடல்கள் அடையாளம் காணப்பட்டன

அகமதாபாத், ஜூன் 18: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 270 பேரில் 190 பேரின் உடல்கள் மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன. இதில், வெளிநாட்டினா் 32 போ் (பிரிட்டன் 27, போா்ச்சுகல் 4, கனடா 1) உள்பட 159 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

விபத்தில் காயமடைந்தவா்களில் நகர பொது மருத்துவமனையில் 7 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 12 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

ஒடிசாவில் மேலும் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப... மேலும் பார்க்க

நிலம்பூர் இடைத்தேர்தல்: 11 மணி நிலவரம்!

கேரளத்தின் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி 30.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத்தில் தரையிறக்கம்!

ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் அவசரமான தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்-திருப்பதிக்கு இன்று காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமா... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! தில்லியில் அவசர தரையிறக்கம்!

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.தில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விம... மேலும் பார்க்க

எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மோடி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்க... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஏர் இந்தியா கருப்புப் பெட்டி!

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந... மேலும் பார்க்க