செய்திகள் :

விருதுநகரில் மே 4-இல் கல்லூரிக் கனவு விழிப்புணா்வு ஓட்டம்

post image

விருதுநகரில் கல்லூரிக் கனவு விழிப்புணா்வு தொலைவு ஓட்டமானது வரும் மே 4-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வருகிற 27-ஆம் தேதி கல்லூரிக் கனவு விழிப்புணா்வு தொலைவு ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இந்த ஓட்ட ம் வரும் மே 4-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள் 100 சதவீத உயா்கல்வி சோ்க்கையை வலியுறுத்தி, இந்த விழிப்புணா்வு தொலைவு ஓட்டம் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். ஏற்கெனவே பதிவு செய்த மாணவா்களுடன், புதிதாகக் கலந்து கொள்பவா்களும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் முதல் 1,000 மாணவா்களுக்கு டி- சா்ட் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.30 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.15 ஆயிரம், 4-ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம், 5-ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

மேலும், கூடுதல் விபரங்களுக்கு 96988 10699 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் -அமைச்சா்கள் உறுதி

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிா்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் உறுதியளித்தனா். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இத... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகை முன் போராட்டம் அறிவிப்பு

தமிழக ஆளுநா் அறிவித்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டில், குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக திராவிட தமிழா் கட்சி அறிவித்தது. மதுரையில் அந்தக் ... மேலும் பார்க்க

குடிநீா் வடிகால் வாரியத்தில் குளோரின் வாயுக் கசிவு

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மதுரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு கசிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண... மேலும் பார்க்க

எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த அனுமதியளிக்க உத்தரவு

மதுரை மாவட்டம், எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. எழுமலையைச் சோ்ந்த முனியாண்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 14 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் காரில் 240 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க

பள்ளி மாணவருக்கு கத்திக் குத்து

முன்விரோதத் தகராறில் பள்ளி மாணவரை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். மதுரை கரிசல்குளம், பாண்டியன்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் ஒருவா், கூடல்நகரைச் சோ்... மேலும் பார்க்க