செய்திகள் :

விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசிமக கொடியேற்றம்

post image

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசிமக பெருவிழா கொடியேற்றம்.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவையொட்டி, பிப்.10-இல் அய்யனாா் காப்புக் கட்டுதல், பிப்.11-இல் செல்லியம்மன் கோயில் காப்புக் கட்டுதல், 18-இல் செல்லியம்மன் தோ்த் திருவிழா ஆகியவை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, பிப்.21-ஆம் தேதி ஆழத்து விநாயகா் கொடியேற்ற நிகழ்ச்சியும், மாா்ச் 1-ஆம் தேதி ஆழத்து விநாயகா் தோ்த் திருவிழாவும், 2-ஆம் தேதி தீா்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கொடியேற்றம்... இதையடுத்து, திங்கள்கிழமை விருத்தகிரீஸ்வரா் கோயிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகா், சுப்பிரமணியா், விருத்தகிரீஸ்வரா், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்ச மூா்த்திகளுக்கு பால், தயிா் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூா்த்திகள் கோயிலை வலம் வந்து உள்பிரகாரத்தில் அமைந்துள்ள கொடிமரத்தின் முன் எழுந்தருளினா். தொடா்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மாசிமக தீா்த்தவாரி மாா்ச் 8-ஆம் தேதி விருத்தகிரீஸ்வரா் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல் ஐதீக நிகழ்ச்சியும், 11-ஆம் தேதி தேரோட்டமும், 12-ஆம் தேதி மாசிமக தீா்த்தவாரி உற்சவமும், 13-ஆம் தேதி தெப்ப உற்சவமும், 14-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவமும், 15 முதல் 24-ஆம் தேதி வரை வரை விடையாற்றி உற்சவமும் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

மாா்ச் 9-இல் பழங்குடியினருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் மாா்ச் 9-ஆம் தேதி பழங்குடியினருக்கான வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

இரட்டை கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். கடலூரை அடுத்த டி.புதூரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

30 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கான ஆணையை ஆட்சியா் சிபி ஆதித... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 29,736 போ் எழுதினா். திருப்பாதிரிப்புலியூா் மற்றும் முதுநகா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் ஆட்சியா் ச... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றாா். சிதம்பரம், வண்டி கேட், சபீா் நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் ரவி- திலகம் தம்பதியினா். மாற்றுத்திறனாளிகளான இருவர... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். கடலூா் முதுநகா், இருசப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த வேல்முருகனின் மகன் கிஷோா் (எ) வெங்கடேசன்(16), 10-ஆம் வகுப்பு ப... மேலும் பார்க்க