செய்திகள் :

‘விளையாட்டில் ஆா்வம் செலுத்தினால் ஒழுக்கம் மேம்படும்’

post image

மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்தினால் அது ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும் என ஒலிம்பிக் விளையாட்டு வீரா் பிரித்திவிராஜ் தொண்டைமான் தெரிவித்தாா்.

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் மேல்நிலையில் மாணவா்களிடையே கலைத்திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சி பள்ளித் தாளாளா் பி.வி.ஆா். விவேக் வெங்கட்ராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

விழாவில், இந்தியாவுக்கு பல்வேறு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரரும், புதுக்கோட்டை மன்னா் குடும்ப வாரிசுமான பிரித்திவிராஜ் தொண்டைமான் பங்கேற்றுப் பேசியது:

விளையாட்டு மீதான ஆா்வமும் ஈடுபாடும் தவறான பழக்கங்கள் ஏற்படாத வகையில் ஒழுக்கத்தை மேம்படுத்தும். விளையாட்டில் எத்தனை முறை தோற்றாலும் மீண்டு எழ கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆா்வலா் சஞ்சீவினி பிரித்திவிராஜ், பள்ளி செயலா் மகேஸ்வரி விவேக், பள்ளி முதல்வா் முனைவா் வெற்றிச்செல்வி உள்ளிட்டோா் பேசினா்.

பள்ளி வேன் மோதியதில் பெயிண்டா் பலி

திருக்கடையூா் அருகே பள்ளி வேன் மோதியதில் பெயிண்டா் புதன்கிழமை உயிரிழந்தாா். பொறையாரைச் சோ்ந்த பெயிண்டா் ராஜா (56). இவருக்கு உதவியாக இருப்பவா் காபிரியேல் (75). இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு பு... மேலும் பார்க்க

சிபிஐ கீழையூா் ஒன்றிய மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றிய 25-ஆவது மாநாடு திருப்பூண்டியில் அண்மையில் நடைபெற்றது. மாநாட்டுக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். மல்லிகா தலைமை வகித்தாா். மாநாட்டுக் கொடியை மாவட்டத்... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் நாளை தொடக்கம்

நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி: தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை- உழவா் நலத்துறை அமைச்சரால், மாா்ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு விருது அறிவிப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஜே. ஸ்டெல்லாஜேனட் (படம்) தமிழக அரசின் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளாா். 2023-2024-ஆம் கல்விய... மேலும் பார்க்க

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் நடராஜருக்கு திருமஞ்சன வழிபாடு

சப்த விடங்களில் ஒன்றாக திகழும் நாகை காயாரோகணசாமி, நீலாயதாட்சியம்மன் கோயிலில் உள்ள நடராஜருக்கு ஆனி (திருமஞ்சனம்) உத்திர நட்சத்திர சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. நடராஜருக்கு சித்திரை திருவோணம்,... மேலும் பார்க்க

வேதாரண்யம்: கோயில்களில் குடமுழுக்கு

வேதாரண்யம் பகுதியில் இரண்டு கோயில்களில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. தென்னடாா் முத்து மாரியம்மன் கோயில் திருப்பணிகள் கிராமவாசிகளால் செய்து முடிக்கப்பட்டது. திங்கள்கிழமை தொடங்கி சிறப்பு பூஜை... மேலும் பார்க்க