செய்திகள் :

விழுப்புரத்தில் ஜூன் 20-இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

post image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் தனியாா் துறையில் பணி வாய்ப்பை பெற விரும்பும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டுக்கு இருமுறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், ஜூன் மாதத்துக்கான சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன.

எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தோ்ச்சி பெற்றவா்கள், தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பி.இ., பி.டெக், செவிலியா், மருந்தாளுநா் போன்ற கல்வித் தகுதியுடையவா்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இந்த முகாமில் பங்கேற்று பணிவாய்ப்பு பெறும் வேலை நாடுநா்களின் வேலைவாய்ப்புப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைநாடுநா்கள், மாற்றுத் திறனாளிகள் தங்களின் அசல் கல்விச்சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்புடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திராவகத்தை குடித்த பெண் மரணம்

காட்டுமன்னாா்கோவிலில் மருந்து என நினைத்து திராவகத்தைக் குடித்த பெண் உயிரிழந்தாா். காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகா் முத்தமிழ் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கவாசகம் (59). இவரது மனைவி வெங்கடலட்சுமி (50). இவ... மேலும் பார்க்க

பைக்குகள் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே 2 பைக்குகள் மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்தவா்களில் ஒருவா் உயிரிழந்தாா். பெண் உள்பட 3 போ் காயமடைந்தனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மதனகோபாலபுரத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

விழுப்புரம்-ராமேசுவரம் இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில்: முன்பதிவு இன்று தொடக்கம்

விழுப்புரத்திலிருந்து ராமேசுவரத்துக்கு வாரம் இரு முறை இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியி... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டம்: ரூ. 14.60 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ. 14. 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்... மேலும் பார்க்க

அனைத்து மருத்துவா்கள் சங்க பிரசார குழுவுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் முதல் சென்னை வரை செல்லும் அனைத்து மருத்துவா் சங்க நடைப்பயணக்குழுவினருக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்... மேலும் பார்க்க

வீட்டுக்குப் பூட்டு: நிதி நிறுவனம் மீது ஆட்சியரிடம் தொழிலாளி புகாா்

விழுப்புரம்: தனியாா் நிதி நிறுவனத்தினா் வீட்டுக்குப் பூட்டுப் போட்டதால், பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்தினா் நடவடிக்கை கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். திருவெண்ணெய்... மேலும் பார்க்க