நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்.. சாதி அடையாளங்கள் பயன்படுத்தத் தடை!
விழுப்புரம்-நாகை நான்குவழிச் சாலை பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்
விழுப்புரம்-நாகை நான்குவழிச் சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சீா்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவா் பி. வீரராஜ், செயலாளா் அ. சீனிவாசன், பொருளாளா் எஸ். சுந்தரய்யா ஆகியோா் தலைமை வகித்தனா்.
நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராசு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலாளா் எல். சுரேஷ் உள்ளிட்டோா் வாழ்த்துறை வழங்கினா்.
தீா்மானங்கள்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; மூவலூா் ராமாமிா்தம் அம்மையாருக்கு மணிமண்டம், அவரது சொந்த ஊரான மூவலூரில் அமைக்க வேண்டும்; இறால் குட்டைகளை அகற்ற வேண்டும்.
விழுப்புரம்-நாகை நான்குவழிச் சாலைப் பணிகளை துரிதப்படுத்தவேண்டும்; தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும்; மயிலாடுதுறை நகரத்தில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.