செய்திகள் :

விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்களுக்கு முழுமையாக ரத்து!

post image

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் - புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் முழுமையாக ரத்து மற்றும் நிறுத்தி வைத்து இயக்கம் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளன.

விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரியிலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி -விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) ஆகிய இரு ரயில்களும் ஜூன் 26,27,28, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்குப் புறப்படும் எழும்பூர் -புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66051), ஜூன் 29-ஆம் தேதி மட்டும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 60 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா எனத் தெரியவில்லை: ரஷியா கருத்து

சென்னை மெட்ரோ ரயில்கள் தாமதம்: காரணம் என்ன?

சென்னை கோயம்பேடு-அசோக் நகர் மெட்ரோ வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து புதன்கிழமை காலை (ஜூன் 25) வினாடிக்கு 7,815 கன அடியாக சரிந்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த... மேலும் பார்க்க

வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்!: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முன்னாள் பிரதமா் வி.பி.சிங் பிறந்த நாளையொட்டி, வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கோவை உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூன் 24 முதல் ஜூன்... மேலும் பார்க்க

மாம்பழத்துக்கு ஊக்கத் தொகை கோர அரசு முடிவு: அமைச்சா்-அதிகாரிகள் இன்று தில்லி பயணம்

சென்னை: கூட்டு ஒப்பந்தம் மூலமாக, மாம்பழ விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய அரசிடம் வலியுறுத்த மாநில உணவுத... மேலும் பார்க்க

முருகன் மாநாட்டுக்கு பின்னால் இந்துத்துவா சக்திகள் உள்ளது: வைகோ

ஈரோடு: முருகன் மாநாட்டுக்கு பின்னால், பாஜக, ஆா்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகள் உள்ளது என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா். ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடவுளின் பெயர... மேலும் பார்க்க