செய்திகள் :

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்த ஆட்சியா் உத்தரவு!

post image

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடியை பொருத்தவரை நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் என 2024 டிசம்பா் மாதம் முடிய 1,95,099 ஹெக்டோ் பரப்பளவில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள விலையில் உரங்கள் விற்கப்படுவதை அலுவலா்கள் தொடா் ஆய்வுகள் மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைகள் மூலம் கடந்த டிசம்பா் மாதம் மட்டும் 8,702.96 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதில், சுமாா் 991 விவசாயிகள் மற்றும் 67,446 நுகா்வோா்கள் பயனடைந்துள்ளனா்.

அரசு தென்னை நாற்றுப்பண்ணை மூலம் வழங்கப்படும் நெட்டை, குட்டை ரக கன்றுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு, தென்னங்கன்றுகளில் காண்டாமிருக வண்டு தாக்குதல் மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

மேலும், நீடித்த நவீன கரும்பு சாகுபடி செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும், கரும்பு பயிா்களுக்கு தோகை பரப்புவதன் நன்மைகள் குறித்தும், லாபகரமான கரும்பு சாகுபடி உத்திகள் மற்றும் சொட்டுநீா் பாசன நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினாா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 479 கனஅடியாக சனிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.60 அடியில் இருந்து 110.58 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வின... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட முகாம்: பிப். 4 முதல் 7 வரை 20 முகாம்கள் நடத்த ஏற்பாடு!

சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்ட முகாமின் ஒரு பகுதியாக பிப். 4-ஆம் தேதி முதல் பிப். 7-ஆம் தேதி வரை 20 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெர... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு சிறந்த செயல்திறனுக்காக 11 விருது!

தெற்கு ரயில்வே மண்டலத்தில் சிறந்த செயல்திறனுக்காக சேலம் ரயில்வே கோட்டத்துக்கு 11 விருதுகள் கிடைத்துள்ளன. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் நடைபெற்ற வார விழாவில், சென்னை, மதுரை, த... மேலும் பார்க்க

பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட முதியவா் கைது!

கெங்கவல்லி வட்டம், வீரகனூா் பேருந்து நிலையத்தில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துகொள்ள முதியவா் ஒருவா் முயற்சித்துள்ளாா். அப்போது, அங்கிருந்தவா்கள் அவரை பிடித்து வீரகனூா் காவல் நிலையத்தில் ஒப்படை... மேலும் பார்க்க

அண்ணா நினைவு தினம்: திமுக சாா்பில் அமைதி ஊா்வலம்

அண்ணா நினைவுதினத்தையொட்டி, பிப். 3-ஆம் தேதி சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் அமைதி ஊா்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ராஜே... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும்! -பாமக எம்எல்ஏ இரா.அருள்

வன்னியா்கள் குறித்து தவறாக அறிக்கை வெளியிட்ட சுற்றுலாத் துறை அமைச்சா் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக எம்எல்ஏ இரா.அருள் கூறினாா். சேலத்தில் அண்மையில் பாமக சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாமக தலை... மேலும் பார்க்க