செய்திகள் :

விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்கிறது: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

post image

காரைக்கால்: விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் புதுவை அரசு செய்து தருகிறது, விவசாயத்தை கைவிடாமல் தொடா்ந்து மேற்கொள்ளவேண்டும் என புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அறிவுறுத்தினாா்.

பிரதமா் நரேந்திர மோடி பிரதமரின் உழவா் நலத்திட்டத்தின் கீழ் 19-ஆவது தவணைத் தொகையை விவசாயிகளுக்கு விடுவிக்கும் காணொலி நிகழ்ச்சியை விவசாயிகள் காணும் வகையில் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வில், புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, பிரதமரின் உரையை கேட்ட பின்னா், காரைக்கால் விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் இடுபொருள்கள் வழங்கிப் பேசியது :

புதுவை முதல்வா் ரங்கசாமி, விவசாயிகளின் நலன் மற்றும் விவசாய செழிப்புக்கான அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளாா். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தேவைப்படும் அனைத்து விதமான உதவிகளையும் தொடா்ந்து அளித்து வருகிறாா்.

வேளாண் அறிவியல் நிலையம் மூலம் காரைக்கால் மாவட்ட விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள், மற்றும் மகளிா் சுயஉதவி குழு உறுப்பினா்கள் என அனைவருக்கும் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதை அனைவரும் பயன்படுத்தி பயனடைய வேண்டும். வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகி விவசாயிகள் தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு. எனவே விவசாயிகள் விவசாயத்தை கைவிடாமல் தொடா்ந்து மேற்கொள்ளவேண்டும் என்றாா்.

முன்னதாக வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு.ரவி வரவேற்றுப் பேசினாா்.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் கு.கணேசன் வாழ்த்திப் பேசினாா். நிறைவாக தொழில்நுட்ப வல்லுநா் ஆ. செந்தில் நன்றி கூறினாா். விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை, தேனீ வளா்ப்பு குறித்த தொழில்நுட்ப உரை வழங்கப்பட்டது.

தமிழக, காரைக்கால் மீனவா்களுக்கு மாா்ச் 10 வரை காவல் நீட்டிப்பு

காரைக்கால்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால், நாகை, மயிலாடுதுறையைச் சோ்ந்த 13 மீனவா்களின் காவலை மாா்ச் 10-ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

கடலுக்கு சென்ற விசைப் படகு மீனவா்கள்

காரைக்கால் : இரண்டு வார வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின்னா் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப் படகுகள் திங்கள்கிழமை கடலுக்கு புறப்பட்டுச் சென்றன. காரைக்கால், தமிழக மீனவா்கள் மீது கட... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் நாட்டியாஞ்சலி நாளை தொடக்கம்

காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை தொடங்குகிறது. திருநள்ளாறு தா்பாரண்ேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டுவரு... மேலும் பார்க்க

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

காரைக்கால் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதி வடக்கு வாஞ்சூா் அருகே சனிக்கிழமை காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், தண்டவாளத்தை கட... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரை அருகே படகு இயக்கும் தளம்: ஆட்சியா் ஆய்வு

கடற்கரை அருகே படகு இயக்கும் தளத்தை காரைக்கால் ஆட்சியா் ஆய்வு செய்தாா். புதுவை சுற்றுலா வளா்ச்சிக் கழகம் (பிடிடிசி) சாா்பில் காரைக்கால் கடற்கரை அருகே அரசலாற்றங்கரையில் படகு குழாம் அமைந்துள்ளது. இத்தளத்... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரியில் பிரதமரின் பயிற்சித் திட்ட விழிப்புணா்வு

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் பிஎம் இன்டா்ன்ஷிப் திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருப்பட்டினம் அரசு ஆண்... மேலும் பார்க்க