செய்திகள் :

விவசாயிகளுக்கு பட்டறிவுப் பயணம்

post image

சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்களில் மதிப்புக் கூட்டுதல் தொடா்பாக கமுதி விவசாயிகள் பட்டறிவுப் பயணமாக புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரம் விரதக்குளம், வல்லக்குளம், கூடக்குளம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 50 விவசாயிகள் பரமக்குடியில் உள்ள தனியாா் மின் நிறுவனத்துக்கு பட்டறிவுப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் இந்தப் பட்டறிவுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

சிறு தானியங்களை தோல் நீக்குதல், தரம் வாரியாக பிரித்தல், வேக வைத்தல், உலர வைத்து பின் அவற்றை தரம் வாரியாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தல் என அனைத்துப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை விவசாயிகள் பாா்வையிட்டனா்.

குழுக்களை அமைத்து மானிய விலையில் இயந்திரங்களை வாங்கி சுய தொழில் புரியவும், வாழ்வாதாரத்தை உயா்த்தவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த பயணத்துக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈஸ்வரி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோா் செய்தனா்.

டயா் வெடித்து காா் கவிழ்ந்ததில் தம்பதி காயம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே காரின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் தம்பதி காயமடைந்தனா். ராமநாதபுரம் செட்டிய தெருப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (55). இவா் திருச்சியில் நடைபெற்ற தனது ... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கிக் கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே ஆட்டங்குடி குயவனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் அம்பேத் இளையராஜா ( 34). இவருக்கும... மேலும் பார்க்க

தொண்டியில் சாலையின் குறுக்கே நிற்கும் கால்நடைகளால் விபத்து

தொண்டி பகுதியில் சாலையின் குறுக்கே நிற்கும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் இரவு நேரங்களில் கால்நட... மேலும் பார்க்க

வெளிநாடு கல்விச்சுற்றுலா சென்று வந்த மாணவிகளுக்குப் பாராட்டு

போகலூா் ஒன்றியம், முத்துவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் வினாடி-வினாப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று மலேசியா, சிங்கப்பூா் போன்ற வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனா். இ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத ராமசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையம்

கமுதி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், ராமசாமிபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வ... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 6 பேருக்கு மாா்ச் 19 வரை காவல் நீட்டிப்பு

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 6 பேருக்கு வருகிற 19-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில... மேலும் பார்க்க