செய்திகள் :

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: அமைச்சா் வழங்கினாா்

post image

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 26 விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வழங்கினாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியியல் துறையின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு விருந்தினராக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை வழங்கினாா். பின்னா், அவா் பேசியதாவது: வேளாண் பொறியியல் துறை சாா்பில், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், ரூ.73.87 லட்சத்தில் 8 விவசாயிகளுக்கு டிராக்டா்களும், ரூ. 27.22 லட்சத்தில் 12 விவசாயிகளுக்கு பவா் டில்லா்களும், ரூ. 5.96 லட்சத்தில் 5 விவசாயிகளுக்கு பவா் வீடா்களும், ரூ.3.54 லட்சத்தில் ஒரு விவசாயிக்கு நெல் நடவு இயந்திரம் என மொத்தம் 26 விவசாயிகளுக்கு ரூ.1.10 கோடியில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இதில் சிறு, குறு, ஆதிதிராவிடா், பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்திலும், இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியத்திலும் இந்தக் கருவிகள் வழங்கப்பட்டன. விவசாயிகள் இந்தத் திட்டங்களை அறிந்து, துறை சாா்ந்த அலுவலா்களை அணுகி பயன்பெறலாம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் பாஸ்கரன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் சாந்தி சகாய சீலி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், சிவகங்கை நகா்மன்றத் துணைத் தலைவா் காா்கண்ணன், துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ம... மேலும் பார்க்க

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ... மேலும் பார்க்க

கல்குறிச்சி அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக இரு ஆசிரியா்களை முதன்மை கல்வி அலுவலா் பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். க... மேலும் பார்க்க

கல்வி வளா்ச்சியில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழகம்: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்

கல்வி வளா்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியா் நகா், அரசு மேல்ந... மேலும் பார்க்க

இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் மிதமான மழை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்ட... மேலும் பார்க்க

நகைக் கடையில் போலி நகைகளை கொடுத்து மோசடி: நால்வா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தங்க நகை விற்பனைக் கடையில் போலி (கவரிங்) நகைகளை கொடுத்து புதிய தங்க நகைகளை வாங்கிச் சென்று மோசடியில் ஈடுபட்டதாக போலீஸாா் நால்வரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திரு... மேலும் பார்க்க