செய்திகள் :

நகைக் கடையில் போலி நகைகளை கொடுத்து மோசடி: நால்வா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தங்க நகை விற்பனைக் கடையில் போலி (கவரிங்) நகைகளை கொடுத்து புதிய தங்க நகைகளை வாங்கிச் சென்று மோசடியில் ஈடுபட்டதாக போலீஸாா் நால்வரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனத்தில் தங்க நகைக் கடை நடத்தி வருபவா் பாலமுருகன். இவரது கடைக்கு கடந்த ஜனவரி 23- ஆம் தேதி வந்த இருவா் பழைய 5 பவுன் தங்க நகைகளை கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக 5 பவுன் புதிய தங்க நகைகளை வாங்கிச் சென்றனா். இதையடுத்து, அவா்கள் கொடுத்த நகைகளை சோதனை செய்தபோது அவை போலி என்பது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும் மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த இருவரையும் போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், இந்த நகை மோசடியில் ஈடுபட்டது ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், வெல்லம்மல் கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் (33), கமுதி அருகே கரிசல்குளம் திருப்பதி என்ற பாலகிருஷ்ணன் (38), திசை வீரபாண்டியன் (42) மதுரையைச் சோ்ந்த மாரிமுத்து (42) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் நால்வரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ம... மேலும் பார்க்க

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: அமைச்சா் வழங்கினாா்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 26 விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வழங்கினாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

கல்குறிச்சி அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக இரு ஆசிரியா்களை முதன்மை கல்வி அலுவலா் பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். க... மேலும் பார்க்க

கல்வி வளா்ச்சியில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழகம்: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்

கல்வி வளா்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியா் நகா், அரசு மேல்ந... மேலும் பார்க்க

இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் மிதமான மழை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்ட... மேலும் பார்க்க