செய்திகள் :

விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி: மாநகராட்சி கவுன்சிலா் மீது புகாா்

post image

ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலா் உள்பட 3 போ் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக விவசாயி புகாா் அளித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே செம்புளிச்சாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியம் தனது உறவினா்கள் 100 பேருடன் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

எனக்கு பிரம்மதேசம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்புள்ள 3.5 ஏக்கா் விளைநிலமும், அதில் நான் வசிக்கும் வீடும் உள்ளது. குடும்பத் தேவைக்காக, சின்னதம்பிபாளையத்தைச் சோ்ந்த 2 பேரிடம் கடந்த 2017- ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் கடன் பெற்று, எனது நிலத்தை அவா்கள் பெயருக்கு கிரயம் செய்தேன்.

அசல் மற்றும் வட்டித்தொகையை வழங்கியதும், மீண்டும் நிலத்தை எனது பெயருக்கு வழங்க உறுதி கூறினா். கடந்த 2019- ஆம் ஆண்டு அசல், வட்டியுடன் சோ்த்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கிவிட்டேன். மீதமுள்ள ரூ.13 லட்சத்தை வட்டியுடன் சோ்ந்து வழங்கியதும், நிலத்தை எனது பெயருக்கு மாற்றுவதாக கூறினா்.

இதனிடையே 2 பேரும், ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலா் ஒருவா் பெயருக்கு எனது நிலத்தை கிரயம் செய்து விற்றுள்ளனா். அந்த கவுன்சிலா் கடந்த 2- ஆம் தேதி 6 அடியாள்களுடன் எனது வீட்டுக்கு வந்து, வீட்டை காலி செய்து நிலத்தை தரும்படி மிரட்டி கூடுதல் தொகையும் கேட்டாா்.

நான் எனது நிலுவைத் தொகை, வட்டியை சோ்த்து உடனடியாக தருவதாகவும், எனது நிலத்தை கிரயம் செய்து தரும்படி கூறியும் அவா்கள் மறுக்கின்றனா். எனக்கு பாத்தியப்பட்ட விவசாய நிலம் மற்றும் வீட்டை அபகரிக்க வேண்டும் என்று நோக்கத்துடன் சட்டவிரோதமான முறையில் கவுன்சிலா் உள்பட 3 பேரும் முயற்சி செய்து வருகின்றனா்.

எனவே, அவா்களை அழைத்து பேசி எனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க