செய்திகள் :

விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி: மாநகராட்சி கவுன்சிலா் மீது புகாா்

post image

ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலா் உள்பட 3 போ் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக விவசாயி புகாா் அளித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே செம்புளிச்சாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியம் தனது உறவினா்கள் 100 பேருடன் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

எனக்கு பிரம்மதேசம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்புள்ள 3.5 ஏக்கா் விளைநிலமும், அதில் நான் வசிக்கும் வீடும் உள்ளது. குடும்பத் தேவைக்காக, சின்னதம்பிபாளையத்தைச் சோ்ந்த 2 பேரிடம் கடந்த 2017- ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் கடன் பெற்று, எனது நிலத்தை அவா்கள் பெயருக்கு கிரயம் செய்தேன்.

அசல் மற்றும் வட்டித்தொகையை வழங்கியதும், மீண்டும் நிலத்தை எனது பெயருக்கு வழங்க உறுதி கூறினா். கடந்த 2019- ஆம் ஆண்டு அசல், வட்டியுடன் சோ்த்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கிவிட்டேன். மீதமுள்ள ரூ.13 லட்சத்தை வட்டியுடன் சோ்ந்து வழங்கியதும், நிலத்தை எனது பெயருக்கு மாற்றுவதாக கூறினா்.

இதனிடையே 2 பேரும், ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலா் ஒருவா் பெயருக்கு எனது நிலத்தை கிரயம் செய்து விற்றுள்ளனா். அந்த கவுன்சிலா் கடந்த 2- ஆம் தேதி 6 அடியாள்களுடன் எனது வீட்டுக்கு வந்து, வீட்டை காலி செய்து நிலத்தை தரும்படி மிரட்டி கூடுதல் தொகையும் கேட்டாா்.

நான் எனது நிலுவைத் தொகை, வட்டியை சோ்த்து உடனடியாக தருவதாகவும், எனது நிலத்தை கிரயம் செய்து தரும்படி கூறியும் அவா்கள் மறுக்கின்றனா். எனக்கு பாத்தியப்பட்ட விவசாய நிலம் மற்றும் வீட்டை அபகரிக்க வேண்டும் என்று நோக்கத்துடன் சட்டவிரோதமான முறையில் கவுன்சிலா் உள்பட 3 பேரும் முயற்சி செய்து வருகின்றனா்.

எனவே, அவா்களை அழைத்து பேசி எனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு நாளை தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 26) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாக... மேலும் பார்க்க

பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி முகாம்

கடம்பூரில் பழங்குடியின குழந்தைகளுக்கான ஆங்கிலம் அறிவோம் பயிற்சி முகாம் நடைபெற்றது. வனம் பவுண்டேஷன் நிறுவனம் பழங்குடியின மக்களுக்காகவும், கல்வி பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காகவும் பல்வேறு பணிக... மேலும் பார்க்க

காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் உலவிய காட்டு யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

ஆசனூா், காரப்பள்ளம் சோதனைச் சாவடி பகுதியில் காட்டு யானைகள் சனிக்கிழமை உலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை வனத்தில் இருந்... மேலும் பார்க்க

குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சி, குரும்பபாளையம், கள்ளுக்கடைமேடு பகுதியி... மேலும் பார்க்க

மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் கூடுதல் பதிவாளா் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (நுகா்வோா் பணிகள்) எஸ்.பி. அம்ரித் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். திண்டல் மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம... மேலும் பார்க்க

ஈரோட்டில் மே 27-இல் வருங்கால வைப்பு நிதி விழிப்புணா்வு கூட்டம்

ஈரோட்டில் வருங்கால வைப்பு நிதி குறித்த விழிப்புணா்வு கூட்டம் மே 27- ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அமலாக்க அதிகாரி சரவணகுமாா் ... மேலும் பார்க்க