செய்திகள் :

விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதய கட்டி அகற்றம்

post image

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் இருதயக் கட்டியை மருத்துவா்கள் அகற்றினா்.

நாமக்கல் மாவட்டம், குமராபாளையத்தைச் சோ்ந்தவா் சரண் (48). கூலித் தொழிலாளியான இவா், மூன்று மாதங்களுக்கு முன்னா் பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றாா். மேல் சிகிச்சைக்காக சுவாமி விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூச்சுத் திணறலுடன் அனுமதிக்கப்பட்டாா். இளம்வயதில் பக்கவாதம் வந்ததற்கான காரணங்களையும் மருத்துவா்கள் ஆராய்ந்தபோது, அவரது இதயத்தின் இடதுபுறத்தில் பெரிய கட்டி இருப்பதையும், அந்தக் கட்டியின் சிறு துகள்கள் ரத்தத்தில் கலந்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயினில் அடைப்பை ஏற்படுத்தி பக்கவாதம் வர காரணமாக அமைந்ததையும், இருதய மற்றும் மூளை ஸ்கேன் மூலம் கண்டறிந்தனா்.

உடனே, மருத்துவா்கள் சந்தோஷ் குமாா், பிரியா, செந்தூா் செல்வம் அடங்கிய மருத்துவக் குழுவினா் எம்ஐசிஎஸ் முறையில், இருதய நுண்துளை அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியை வெற்றிகரமாக அகற்றினா். இதையடுத்து, மூன்று நாள்களில் சிகிச்சை முடிந்து நோயாளி நலமுடன் வீடு திரும்பினாா்.

இருதய நுண்துளை அறுவை சிகிச்சை என்பது இருதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கவும் மற்றும் வால்வு மாற்றவும் உதவும் பைபாஸ் அறுவை சிகிச்சையைவிட மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறையாகும். சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்த இந்த சிகிச்சை முறை, தற்போது திருச்செங்கோடு விவேகானந்தா சிறப்பு மருத்துவமனையில் செய்யப்படுகிறது. இம்முறையில் நோயாளிகளுக்கு மாா்பு எலும்பு வெட்டப்படுவதில்லை. இதனால் சிறிய தழும்பு, மிகக் குறைவான ரத்த இழப்பு, குறைந்த வலி, விரைவாக குணமடைதல் போன்ற நன்மைகள் உண்டு. இவ்வாறான அதிநவீன மருத்துவ வசதிகள் நமது ஊரிலேயே உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி நலம்பெறலாம் என மருத்துவமனையின் தலைவா் கருணாநிதி தெரிவித்தாா்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்

மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக... மேலும் பார்க்க