செய்திகள் :

விஷமிகளின் செயல்: போஸ்டர் சர்ச்சை பற்றி ஆனந்த்!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்கும் விஜய்யை வரவேற்று, பனையூர் கட்சி அலுவலகத்தில் இருந்து பொதுக் குழு நடைபெறும் திருவான்மியூர் மண்டபம் வரை போஸ்டர்களும் பேனர்களும் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளன.

தவெகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ”தளபதி அவர்களை பொதுக் குழுவுக்கு அழைத்துவரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்களின் அரசியல் ஆசான், தவெக பொதுச் செயலாளர், வருங்கால தமிழக முதலமைச்சரை வருக வருக என வரவேற்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, பொதுச் செயலாளர் ஆனந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி அவர் தெரிவித்ததாவது:

”வேண்டுமென்றே சில விஷமிகள் செய்த செயல். வருகின்ற 2026 இல் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக விஜய் வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நான் கோடான கோடி தொண்டர்களில் ஒருவன். இதுபோன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிக்க : வருங்கால முதல்வர் ஆனந்த்! தவெக போஸ்டரால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் விஜய் தலைமையில் தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க