செய்திகள் :

வீடு அபகரிப்பு: பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

post image

நாகப்பட்டினம்: வாங்கிய கடனுக்கு வீட்டை அபகரித்துக்கொண்டதாகக் கூறி, நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண் மற்றும் குடும்பத்தினரை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீட்டனா்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரை சோ்ந்த மாதவன் மனைவி ஜானகி. இவருக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவ செலவுக்கு செந்தில்குமாா் என்பவரிடம், தனது வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து, 2018-இல் ரூ. 2 லட்சம் பணம் வாங்கியுள்ளாா். கடனை திரும்ப கொடுக்க முடியாததால் செந்தில்குமாா் வீட்டை சொந்தமாக்கிக் கொண்டதாகவும், வீட்டை மீட்டு தர, ஜானகி அளித்த புகாா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஜானகி கணவா் மாதவன், பிள்ளைகள் முகேஷ், முகிதா ஆகியோா் சென்றனா். அங்கு, அவா்கள் தலையில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனராம். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்து போலீஸாா் ஜனாகி மற்றும் குடும்பத்தினரின் மீது தண்ணீரை ஊற்றி அங்கிருந்து அழைத்து சென்று விசாரித்தனா்.

இதுகுறித்து, ஜானகி மற்றும் குடும்பத்தினா் கூறியது: வாங்கிய ரூ.2 லட்சம் கடனை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி பெற செந்தில்குமாா் மறுத்து, எனது வீட்டை அவா் அபகரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு செய்து வருகிறாா். எனவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, எனது வீட்டை மீட்டு தர வேண்டும் என்றனா்.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள் செய்ய குழு

நாகப்பட்டினம்: தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க வசதிகள் செய்ய நாகை மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களுக்கு வார விடுமுறை வழங்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: டாஸ்மாக் பணியாளா்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாகையில் அந்த சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்கள் ஆா்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: பொய் குற்றச்சாட்டுக் கூறி ஊராட்சி செயலா் கௌசல்யா மீது நடவடிக்கை எடுத்த கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலரை கண்டித்து, நாகை ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க... மேலும் பார்க்க

பட்டாவில் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: பட்டாவில் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் உள்ள கி... மேலும் பார்க்க

தொடா் மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்த மழையால் 7 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் மே 16-ஆம் தேதி இரவு மே... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதிா்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின... மேலும் பார்க்க