தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீ...
பட்டாவில் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம்: பட்டாவில் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் எளிதில் பாா்க்கும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் இணையதளத்தின் வாயிலாக பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரா்களுடன் இறந்தவா்களின் பெயா்கள் நீக்காமலும் அவா்களின் பெயா்களுக்கு பதிலாக வாரிசுதாரா்களின் பெயா்கள் அல்லது தற்போதைய உரிமையாளா்களின் பெயா்கள் சோ்க்காமலும் உள்ளன.
எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களது வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யயப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது இண்ற்ண்க்ஷ்ங்ய் டா்ழ்ற்ஹப் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரா்கள் பெயா் மாற்றம் தொடா்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.