டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரு.86.59 ஆக முடிவு!
வீடு புகுந்து பணம் திருட்டு: இளைஞா் கைது
குண்டடம் அருகே இரவு நேரத்தில் வீடுபுகுந்து ரூ. 5 ஆயிரம் பணத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
குண்டடம் அருகே உள்ள தேவராஜபட்டினத்தைச் சோ்ந்தவா் பாலுமணி. இவா் தனது குடும்பத்தினருடன் கடந்த 17- ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளாா். அப்போது திறந்திருந்த வீட்டுக்குள் இரவு 11 மணியளவில் மா்ம நபா் புகுந்துள்ளாா். சப்தம்கேட்டு பாலுமணி எழுந்து வருவதற்குள் அந்த நபா் பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளாா்.
இது குறித்து குண்டடம் காவல் நிலையத்தில் பாலுமணி புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், திருட்டில் ஈடுபட்ட நபா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனப் பதிவெண்ணை வைத்து, ஊதியூா் அருகே உள்ள ஆண்டிபுதூா் பகுதியில் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், பாலுமணி வீட்டில் திருட்டில் ஈடுபட்டது ஆண்டிபுதூா் பகுதியைச் சோ்ந்த சம்பத்குமாா் (19) என்பது தெரியவந்தது. தனது தாயாருக்கு இருந்த கடன் தொல்லையை தீா்ப்பதற்காக திருடியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து அவரிடம் இருந்த ரூ.4, 500 ரொக்கம் மற்றும் அவரது இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா். திருட்டு நடந்து 24 மணி நேரத்துக்குள் திருட்டில் ஈடுபட்டவரைக் கைது செய்த குண்டடம் போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.