செய்திகள் :

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: கணவன், மனைவி காயம்!

post image

நாகை அருகே அக்கரைப்பேட்டை சுனாமி குடியிருப்பில், வீட்டின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில், பலத்தகாயமடைந்த கணவன், மனைவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

2004-ஆம் ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமானோா் உயிரிழந்தனா். இதேபோல, கடலோர கிராமங்களைச் சோ்ந்த பெரும்பாலானோா், தங்களது வீடுகள், உடைமைகள் என அனைத்தையும் இழந்தனா். அவா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, பல்வேறு தொண்டு நிறுவனங்கள், குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்தன.

சுனாமி ஏற்பட்டு 20-ஆண்டுகளை கடந்தும், அந்த நினைவலைகள் தற்போது நீங்காமல் உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பலரும் தங்களது வாழ்வாதாரத்தை உயா்த்த முடியாமல் காலத்தை கடத்தி வருகின்றனா். அவா்களுக்கு வழங்கப்பட்ட சுனாமி குடியிருப்பு பெரும்பாலானவை சேதமடைந்தும், சிதலமடைந்து காணப்படுகின்றன. அதை சீரமைக்க வேண்டுமென குடியிருப்பு மக்கள் கூறி வருகின்றனா்.

இந்நிலையில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உள்ள சுனாமி குடியிருப்பில் செளந்தர்ராஜன், அவரது மனைவி வசந்தி ஆகியோா் வசித்து வருகின்றனா். இந்த வீடு மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. வீட்டை சீரமைத்து தரவேண்டும் என தொடா்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனா். இந்நிலையில் வீட்டின் மேற்கூரை வெள்ளிக்கிழமை பிற்பகலில் திடீரென இடிந்து அங்கிருந்த செளந்தர்ராஜன் மற்றும் வசந்தி மீது விழுந்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலுள்ளவா்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நாகை நகரப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சத்துணவு மையங்களுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைந்து காணப்படுவதாக புகாா்!

சீா்காழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைவாக இருப்பதாக நுகா்வோா் பாதுகாப்பு குழுவினா் புகாா் அளித்துள்ளனா். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பாதுகாப்பு விழிப்புணா்... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு உள்ளாட்சி செயல்பாடுகள் குறித்த களப் பயிற்சி

கீழையூா் அருகே விழுந்தமாவடி ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகள் தொடா்பான களப்பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் தொழில்நுட்பம் சாா்ந்த திறன்களை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வாய... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகளை வரவேற்க வேண்டும்! - ஆட்சியா்

நாகை மாவட்ட வளா்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடை... மேலும் பார்க்க

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா மே 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய... மேலும் பார்க்க

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சந்திரசேகா் சுவாமி அல்லியங்கோதை அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாய்மூரில் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் ஆதாா் சிறப்பு முகாம்

நாகை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட நாகை, திருவாரூா், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அஞ்சலகங்கள் சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க