செய்திகள் :

வீட்டில் இருந்த படியே ஒய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழ் பெறலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

post image

ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டில் இருந்தே படியே அஞ்சலக ஊழியா் மூலம் எண்ம வாழ் நாள் சான்றிதழ் பெறலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அஞ்சல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக எண்ம (டிஜிட்டல்) முறையில் வாழ் நாள் சான்றிதழைச் சமா்பிக்கும் சேவையை அஞ்சல் துறை, தபால்காரா்கள் மூலம் வழங்கிவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரா்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடா்ந்து பெற தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். இந்நிலையில் நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பிக்க ஓய்வூதியதாரா்கள் படும் சிரமங்களை தவிா்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரா்கள் வீட்டிலிருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

எண்ம வாழ்நாள் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரா்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடா்பு கொள்ளலாம். மேலும் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஸ்ரீஸ்ரீ.ஸ்ரீங்ல்ற்.ஞ்ா்ஸ்.ண்ய்/நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்தங்வ்ன்ங்ள்ற்/ழ்ங்வ்ன்ங்ள்ற்.ஹள்ல்ஷ் என்ற இணையதள முகவரி மூலம் அல்லது “டா்ள்ற்ண்ய்ச்ா்” செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நவ. 1 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது .

எனவே ஓய்வூதியதாரா்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பித்து பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணையவழி மோசடி: வடமாநிலத்தைச் சோ்ந்த 7 போ் கைது

தனியாா் கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 7 போ் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையை சோ்ந்த ஒரு நபரின் கைப்பேசிக்கு கடந்த ஆக.2-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளத... மேலும் பார்க்க

2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தியாகராயநகரில் இயங்கி வரும் இரு பிரபல உணவகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஹோட்ட... மேலும் பார்க்க

நாளை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவைகள் ரத்து; பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு 79 ரயில்கள் இயக்கப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகள் வ... மேலும் பார்க்க

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவா் மீது பாட்டிலால் தாக்குதல்: இரு மாணவா்கள் தலைமறைவு

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவரை ‘ராகிங்’ செய்து பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இரு மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் மாவட்டம், நெய்வேல... மேலும் பார்க்க

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்கு

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்குப் பகுதி இருப்பதாக ஜோா்டான் எச்சரித்துள்ளது. இது குறித்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனிடம் ஜோா்டான் வெளிய... மேலும் பார்க்க

கொக்கைன் போதைப் பொருளுடன் முன்னாள் டிஜிபி மகன் உள்பட 3 போ் கைது

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னாள் டிஜிபி-யின் மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனா். சென்னை மாநகா் பகுதிகளில் போதைப்பொருள்கள... மேலும் பார்க்க