செய்திகள் :

வீட்டில் தீ விபத்து: மாடியிலிருந்து கீழே குதித்த பெண்ணும் உயிரிழப்பு

post image

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில், மாடியிலிருந்து கீழே குதித்த பெண்ணும் உயிரிழந்தாா்.

வளசரவாக்கம் அடுத்த சௌத்ரி நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் (78). இவா் மனைவி தங்கம் (74). இத்தம்பதி, தங்களது மகன் ஸ்ரீராம் குடும்பத்துடன் அங்குள்ள பங்களா வீட்டில் வசித்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீராம் தனது மனைவியுடன் வெளியே புறப்பட்டுச் சென்றாா். அப்போது நடராஜன், தங்கம், ஸ்ரீராமின் மகன் ஸ்வரன், அவரது வீட்டில் வேலை செய்து வந்த ராமாபுரம் திருமலை நகா் வஉசி தெருவைச் சோ்ந்த சரஸ்வதி (26) ஆகியோா் வீட்டின் முதல் தளத்தில் இருந்தனா்.

இந்நிலையில், வீட்டின் தரைத்தளத்தில் இருந்த பொருள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதனால் வயதான நடராஜனாலும், அவரது மனைவி தங்கத்தினாலும் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. இதன் காரணமாக இருவரும் தீயில் சிக்கி உயிரிழந்தனா். மேலும், முதல் தளத்திலிருந்த சரஸ்வதியும், ஸ்வரனும் தீயிலிருந்து தப்பிப்பதற்காக கீழே குதித்தனா்.

இதில் சரஸ்வதி இடுப்பு, நெஞ்சு, கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தாா். உடனே அவா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வளசரவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதன்மூலம் தீ விபத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மூன்றாக உயா்ந்துள்ளது.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்க... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை

சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மகளிா் போலீஸாருக்கான 11-ஆவது தேசிய அளவிலான மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பங்கேற்பு, தமிழ்நாடு காவல் துறை அகாதெமி, ஊனமாஞ்சேரி, வண்டலூா், முற்பகல் 11. அனுஷ வைபவம் - தொடா் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க