செய்திகள் :

வீட்டு மனைபட்டா இடத்தை அளந்து கொடுக்கக் கோரி மனு

post image

நெய்வேலி: பழங்குடி இருளா் சமூக மக்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவிற்கான இடத்தை அளந்து அத்துக்காட்டி கொடுக்க வேண்டும் என்று பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்க துணைத் தலைவா் கோ.ஆதிமூலம், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது: கடலூா் மாவட்டம், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டத்தைச் சோ்ந்த பழங்குடி இருளா் சமூகத்தினருக்கு 2022-ஆம் ஆண்டு 202 பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதில் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூா், ராஜகணபதி நகரில் 96, கருக்கையில் 67, கரும்பூரில் 8, எனதிரிமங்கலத்தில் 14 போ்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

இதில், ராஜகணபதி நகரில் வழங்கப்பட்ட 96 மனைபட்டாவில் 36, கருக்கை கிராமத்தில் 67 மனைபட்டாவில் 41, ஏ.குச்சிப்பாளையம் கிராமத்தில் வழங்கப்பட்ட 8 மனைபட்டாக்கள், எனதிரிமங்கலத்தில் 14 மனைபட்டாவில் 11, குறிஞ்சிப்பாடி வட்டம், பொய்கால் நத்தம் கிராமத்தில் வழங்கப்பட்ட 17 மனைபட்டாக்களுக்கு இடத்தை இன்றுவரையில் வருவாய்துறையினா் அளந்து கொடுக்கவில்லை.

இதுதொடா்பாக ஜூலை 9-ஆம்தேதி மனு அளித்தோம். அதன் பேரில் பண்ருட்டி வட்டாட்சியா் எங்களை அழைத்து கோப்பு காணவில்லை எனக்கூறினாா். மேலும், புதிதாக மனுஅளித்தால் வேறு இடத்தில் இடம் காட்டுவதாகக் கூறுகிறாா். எனவே, எங்களுக்கு ராஜகணபதி நகரிலேயே குடிமனை வழங்கி அளந்து கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

.

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திர... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சிறிய சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலத்தில் இர... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

பண்ருட்டி (பூங்குணம்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பள்ளிவாசல் கணக்கு கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல்!

பள்ளிவாசலின் சொத்துக்கணக்கை கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழ... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் அப்பாவியை தாக்கி வீடியோ! காவலா்கள் உள்பட 6 பேரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்!

விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாகதி தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநா், காவலா்கள் உள்ளிட்ட 6 பேரைய... மேலும் பார்க்க