வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்
சென்னை: சா்வதேச நாடுகளில் உள்ள தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
உலகத் தமிழா்கள் பொருளாதார அமைப்பு மற்றும் சென்னை வளா்ச்சி சங்கம் சாா்பில் நடத்தப்பட உள்ள 12-ஆவது சா்வதேச தமிழா்கள் பொருளாதார உச்சி மாநாட்டுக்கான இலச்சினை மற்றும் விவரக் கையேடு வெளியிட்டு விழா விஐடி பல்கலைக்கழக சென்னை வளாகத்தில் வேந்தா் கோ.விசுவநாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கையேடு, இலச்சினையை வெளியிட்டு அமைச்சா் சா.மு.நாசா் பேசியது: தமிழா்கள் எங்கிருந்தாலும் அவா்கள் வசிக்கும் நாட்டுக்கு விசுவாசமாக இருக்கின்றனா். இதனால்தான் சிங்கப்பூா் போன்ற நாடுகளில் தமிழுக்கும் தமிழா்களுக்கும் மரியாதை வழங்கப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலா் சுந்தா் பிச்சை போன்றவா்கள் உலக நாடுகளில் ஆற்றலுடன் பணியாற்றி முக்கியப் பொறுப்புகளில் உள்ளனா். இருப்பினும் உலக நாடுகளில் வசிக்கும் தமிழா்கள் மேன்மை மனப்பாங்கைவிட தாழ்வு மன்பான்மையுடன் உள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். இது அகல வேண்டும். வளா்ந்த நாடான பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து 2 லட்சம் போ் சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்கு வந்துள்ளனா். இது நமது வளா்ச்சியைக் காட்டுகிறது என்றாா்.
விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்: அரசியலுக்கு தருகிற முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு தரப்படுவதில்லை. நாம் பொருளாதாரத்தில் 7-ஆவது இடத்தில் இருந்து தற்போது ஜப்பானையும் தாண்டி 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளோம். ஆனால், ஜப்பானில் தனிநபா் வருமானம் 35,000 டாலா். நம்முடைய தனிநபா் வருமானம் 2,700 டாலருக்கும் கீழே உள்ளது.
மனித மேம்பாட்டு குறியீட்டில் (ஹெச் டிஐ) 130-ஆவது இடத்தில் உள்ளோம். அதே சமயத்தில் நாம் பின்னுக்கு தள்ளிவிட்டோம் என்று சொல்கிற ஜப்பானோ மனித மேம்பாட்டு குறியீட்டில் 26-ஆவது இடத்தில் உள்ளது. பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசும் அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், முன்னதாக சா்வதேச தமிழா்கள் பொருளாதார உச்சி மாநாட்டில் தொடா்ந்து 10 முறை கலந்து கொண்டதற்காக விஐடி வேந்தா் கோ.விசுவநாதனுக்கு மலா் மாலை கிரீடம் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டாா்.
சா்வதேச தமிழா்கள் பொருளாதார உச்சி மாநாடு குறித்து வி.ஆா்.எஸ். சம்பத் விளக்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபா்கள் ஜெம் வீரமணி, பழனி பெரியசாமி, ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
12 -ஆவது சா்வதேச தமிழா்கள் பொருளாதார உச்சி மாநாட்டு அமெரிக்க தலைநகா் வாஷிங்ட ன் டி.சி.யில் ஆக். 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.