செய்திகள் :

"வெளிநாடு சென்றால் தலைமறைவு" - பாஜக ஆட்சியின் அமைச்சர் புஜ்பால் குறித்து அமலாக்கப்பிரிவு அச்சம்

post image

மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க கூட்டணி அரசில் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகன் புஜ்பால் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது சகன் புஜ்பாலுக்குப் பதவி கொடுக்கப்படவில்லை.

இதற்கு முன்பு சகன் புஜ்பால் மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது டெல்லியில் மகாராஷ்டிரா சதன் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக சகன் புஜ்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

இப்புகாரின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு சகன் புஜ்பாலைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது. அவர் இப்போது ஜாமீனில் இருக்கிறார்.

பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கும்போதுதான் சகன் புஜ்பால் கைது செய்யப்பட்டார். இப்போது அதே பா.ஜ.க கூட்டணி அரசு மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கிறது.

கைது செய்த அதே அரசு சகன் புஜ்பாலுக்கு அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கிறது. சகன் புஜ்பால் மீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த 20ம் தேதிதான் அமைச்சராக புஜ்பால் பதவியேற்றுக்கொண்டார். சகன் புஜ்பால் தான் வெளிநாடு சென்று வர அனுமதிக்கவேண்டும் என்று கோரி கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஏப்ரல் 29ம் தேதி சகன் புஜ்பால் வெளிநாடு சென்று வரச் சிறப்பு நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்தது. அதோடு பாஸ்போர்ட்டையும் திரும்பக் கொடுக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

மே 24ம் தேதியிலிருந்து ஜூன் 8ம் தேதி வரை வெளிநாடு சென்று வரலாம் என்று கோர்ட் தெரிவித்திருந்தது.

ஆனால் கடந்த மாதம் அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் அதிகாலை நேரத்தில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இதில் சகன் புஜ்பாலின் பாஸ்போர்ட் எரிந்துவிட்டது. இதனால் திட்டமிட்ட தேதியில் சகன் புஜ்பால் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

சகன் புஜ்பால்
சகன் புஜ்பால்

இதையடுத்து புதிய பாஸ்போர்ட் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே வெளிநாடு சென்றுவிட்டுத் திரும்ப வரும் தேதியை நீட்டித்துக் கொடுக்கவேண்டும் என்று கோரி சகன் புஜ்பால் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு விசாரணைக்கு வந்தபோது அமலாக்கப்பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், சகன் புஜ்பாலை வெளிநாடு செல்ல அனுமதித்தால் அவர் தலைமறைவாகிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.

ஆனால் கோர்ட் அமைச்சர் சகன் புஜ்பால் வெளிநாட்டிலிருந்து நான்கு நாள்கள் தாமதமாக வரலாம் என்று தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Trump Vs Musk : நட்பில் விரிசல்; 'எலான் மஸ்கிற்கு அடைக்கலம் தர தயார்' - ரஷ்யா கமென்ட்!

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது நல்ல பிணைப்புடன் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், இப்போதும் எலியும், பூனையுமாக மாறி உள்ளனர். இதையடுத்து ட்ரம்பின் முன... மேலும் பார்க்க

அமித் ஷா மதுரை வருகை: டி.டி.வி தினகரனைச் சந்திக்க மறுப்பா? என்ன சொல்கிறார் தினகரன்?

நாளை நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை மதுரை வருகிறார்.அப்போது கூட்டணிக் கட்சித்தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அவரைச் சந்திக்க முயன்று வருவதாகச் சொல்லப்... மேலும் பார்க்க

Amit Shah : முக்கிய சந்திப்புகளும், அசைன்மென்ட்டுகளும்! - அமித் ஷாவின் மதுரை விசிட் பின்னணி

தமிழகத்தில் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பணிகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளனர். பாஜக-வும் தனது தேர்தல் பணிகளை அண்மைக்காலமாக வேகப்படுத்தி உள்ளது. மாநில தலைமையில் மா... மேலும் பார்க்க

'எனக்கு பதவி தான் வேண்டும்; அடம்பிடிக்கும் உதயநிதி' - ஆர்.பி உதயகுமார் பேசியதென்ன?

`திமுகவில் உள்கட்சி பூசல் உருவாகி உள்ளது' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியிருக்கிறார்.இது குறித்து ஆர்.பி உதயகுமார் வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது..."மன்னராட்சிக்கு வழிவகுக்க உதய... மேலும் பார்க்க

'I am Alright; சென்னை போகிறேன், அங்கு தான்..!' - குருமூர்த்தி சந்திப்பு குறித்து ராமதாஸ் பேசியதென்ன?

பாமக-வில் தந்தை - மகன் விரிசல் முற்றிய நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 5) காலை பாமக தலைவர் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வந்தார். அன்புமணி வந்து சென்றதுமே, ஆடிட்டர் குருமூர்த்த... மேலும் பார்க்க

Delimitation: `கமலாலய மவுத் பீஸ்; டெல்லி பண்ணையார்களின் அடிமை’ - எடப்பாடி மீது அமைச்சர் காட்டம்

எதிர்க்கட்சிகளின் பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக கடந்த மாதம் அறிவித்தது மத்திய பாஜக அரசு.அதேபோல், 2021-ல் கொரோனாவால் எடுக்க முடியாமல்போன மக்கள்தொகை கணக்கெடுப்பும... மேலும் பார்க்க