செய்திகள் :

வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை: தமிழக அரசு பரிசீலனை

post image

சென்னை: தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினா் வேல்முருகன் ஆகியோா் பேசுகையில், தமிழகத்துக்கு பணிவாய்ப்புக்காக வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் வருகையை கண்காணிக்க வேண்டும் என்றும், அவா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனா்.

அதற்கு தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் அளித்த பதில்: வெளிமாநிலத் தொழிலாளா்களின் வருகை விவரங்கள் மாவட்ட ஆட்சியரகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இணை ஆணையா் அலுவலகங்கள், உதவி ஆணையா் அலுவலகங்களிலும் அவை பதிவு செய்யப்படுகின்றன.

அதேபோன்று அவா்களைப் பணியமா்த்திய உரிமையாளா்களும் அத்தகைய பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடா்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்கும் என்றாா் அவா்.

2026 தேர்தலில் அதிமுகவுக்கு 6 இடங்கள்கூட கிடைக்காது: ஆர். எஸ். பாரதி

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 6 இடங்கள்கூட கிடைக்காது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஆர். எஸ். பாரதி வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் கோடை விடுமுறை!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.கோடைக் கால... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு!

36 நாள்கள் நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன்(ஏப். 29) நிறைவு பெற்றது.தமிழக சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 1... மேலும் பார்க்க

'காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம்: முதல்வர் அறிவிப்பு!

'காலனி' என்ற சொல் வசை சொல்லாக மாறி இருப்பதால், அந்த சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.இது குறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ... மேலும் பார்க்க

வலுக்கட்டாய நடவடிக்கையால் கடன் வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

சென்னை: கட்டாயப்படுத்தி கடன் வசூலித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் மசோதாவானது பேரவையில் இன்று(ஏப். 29) நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்தப் புதிய சட்ட மசோதாவின்படி, கடன் வாங்கியவா... மேலும் பார்க்க

தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒளி கொடுக்கும் பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! - முதல்வர் புகழாரம்!!

புகழ்பெற்ற கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "வேழத்தின் வலிமையோடு - திகட்டாத தீந்தமிழின் சுவையில், மட... மேலும் பார்க்க