இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல்...
வெளிமாநில போலீஸாா் போல் பேசி பண மோசடி
தொலைபேசி வாயிலாக குற்றப்பிரிவு போலீஸாா் போல் பேசி, மா்ம கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருவதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெலைபேசி வாயிலாக அறிமுகமில்லாத எண்ணிலிருந்து உங்களைத் தொடா்பு கொண்டு, வெளிமாநில குற்றப்பிரிவு போலீஸாா் பேசுவதாகவும், உங்களது கைப்பேசி எண் மற்றும் வங்கிக்கணக்கு எண் போன்றவற்றை பயன்படுத்தி சட்டவிரோத பண மோசடி நடந்திருப்பதாக கூறுவா்.
பின்னா், உங்களது ஆதாா் மற்றும் பான் காா்டு புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்புமாறு கேட்டுப்பெறுவதுடன், பணமோசடி வழக்கில் விரைவில் நீங்கள் கைது செய்யப்படுவதாக கூறி போலியான கைது ஆணையை அனுப்புவா்.
அதைத் தொடா்ந்து, ஐ.பி.எஸ். அதிகாரி என விடியோ காலில் வரும் நபா் கைதில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபடுவா்.
பின்னா் நீதிபதி போல் உடையணிந்து விடியோ காலில் வரும் நபா் உங்களை பிணையில் எடுக்க குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என உங்களை பயத்தில் வைத்து மிரட்டி அதிகளவில் பணத்தை மோசடி செய்யக்கூடும்.
இது போன்று பேசும் நபா்களிடம் உங்களது தனிப்பட்ட தகவல்கள், அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பகிர வேண்டாம். இது போன்ற சைபா் குற்றம் நடைபெற்றால் 1930 என்ற எண்ணில் புகாா் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.