செய்திகள் :

Pakistan: "ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க முடியாது" - ஷெபாஸ் ஷெரிஃப் எச்சரிக்கை!

post image

இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் நிறுத்தத்துக்கு வந்தாலும், சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவில் இருந்து இந்தியா பின்வாங்காது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

முன்னதாக சிந்து நதி நீரை நிறுத்தி வைப்பது போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என பாகிஸ்தான் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தும் இந்தியா அதன் முடிவிலிருந்து பின் வாங்கவில்லை.

Pakistan பிரதமர் பேசியதென்ன?

சிந்து நதி
சிந்து நதி

தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், பாகிஸ்தானுக்கு சொந்தமான ஒரு சொட்டு நீரைக் கூட இந்தியாவை அபகரிக்க விடமாட்டோம் எனப் பேசியிருக்கிறார்.

"நான் எதிரிகளுக்கு இன்று சொல்கிறேன். நீங்கள் எங்கள் தண்ணீரை நிறுத்தி வைக்க நினைத்தால், இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் உங்களால் எங்களது ஒரு சொட்டு தண்ணீரைக் கூட அபகரிக்க முடியாது" எனக் கூறியிருக்கிறார் ஷெரிஃப்.

மேலும் இந்தியா அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், "உங்கள் காதுகளைப் பிடித்துக்கொண்டே இருக்கும்படியான பாடம் கற்பிக்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.

அசிம் முனீர்
அசிம் முனீர்

"சிந்து நதி இந்தியாவின் குடும்பச் சொத்து அல்ல"

ஒருநாள் முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநீக்கம் செய்வது சிந்துவெளி நாகரீகத்தின் மீதான தாக்குதல் என்றும், இதை வைத்துப் போருக்கு கட்டாயப்படுத்தினாலும் பாகிஸ்தான் தயங்காது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய ராணுவ தளபதி அசீம் முனீர், இந்தியா தண்ணீரை நிறுத்த எந்த அணை கட்டினாலும் பாகிஸ்தான் அதை உடைக்கும் எனப் பேசியிருந்தார்.

"சிந்து நதி ஒன்றும் இந்தியர்களின் குடும்பச் சொத்து அல்ல. நதியை நிறுத்த இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை தகர்த்தெறிவதற்கான பொருட்களுக்கு எந்த பஞ்சமும் இல்லை" எனக் கூறியிருந்தார்.

'கோர்ட் சொல்லிட்டாங்க கலைஞ்சிடுங்க, இல்லன்னா..!' - கடைசி மீட்டிங்கில் என்ன பேசப்பட்டது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில், பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையில், போராடுபவர்களை காவல்துறை அப்புறப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் ... மேலும் பார்க்க

"முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியால்தான் நடுத்தெருவில் நிற்கிறோம்" - LTUC தலைவர் பாரதி

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பனி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.இத்தகைய சூழலில், இப்போராட்டம் தொடர... மேலும் பார்க்க

``தமிழிசை சௌந்தரராஜனை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயற்சி"- நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பனி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தை நடத்... மேலும் பார்க்க

தில்லு முல்லு வெற்றி... மோசமான தேர்தல் ஆணையம்! ராஜினாமா செய்வாரா பிரதமர்? | கோ.பாலச்சந்திரன்

நியாயமான, நேர்மையான, சுதந்திரமான தேர்தல்கள் நடைபெறுவதில்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் தற்போது நடைபெறும் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுகின்றனவா என்றால், பெ... மேலும் பார்க்க

பல்கலை., பட்டமளிப்பு விழா விவகாரம்; `கட்சியில் பெயர் வாங்க தரங்கெட்ட நாடகம்!' - அண்ணாமலை கண்டனம்

தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். தென் மாவட்டங்களில் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலைய... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "திமுக-வின் தீய நோக்கம்" - உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து சீமான்

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பனி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.இத்தகைய சூழலில், இப்போராட்டம் தொடர... மேலும் பார்க்க