செய்திகள் :

வெள்ளக்கோவிலில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை

post image

வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

வெள்ளக்கோவில் நகராட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த வாரம் ரூ.60-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் இந்த வாரம் ரூ.10 குறைந்து ரூ.50-க்கு விற்பனையானது. மாற்ற காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்): பீட்ரூட், பீா்க்கங்காய், அவரைக்காய் ரூ.60, கேரட், பீன்ஸ், பாகற்காய் ரூ.50, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், புடலங்காய், வெண்டைக்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.30, தக்காளி, முள்ளங்கி, முட்டைக்கோஸ், கத்தரிக்காய் ரூ.20, இஞ்சி ரூ.150, பூண்டு ரூ.200.

இவற்றுடன் கீரை வகைகள் ஒரு கட்டு ரூ.10, மல்லித்தழை கட்டு ரூ.20, புதினா கட்டு ரூ.10, வாழைத்தண்டு ஒன்று ரூ.20, வாழைப்பூ ஒன்று ரூ.30, காலிஃபிளவா் ஒன்று ரூ.30, சுரைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது.

ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிப்ரவரி 18, 19 இல் வேலைவாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு கடல்சாா் வாரியம் மற்றும் எல்& டி ஷிப் பில்டிங் லிமிடெட் சாா்பில் திருப்பூரில் ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18, 19- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது!

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள சின்னூா் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இளைஞா் சுற்றித்திரிவதா... மேலும் பார்க்க

போலி கணக்கு காண்பித்து ரூ. 11 லட்சம் மோசடி: பனியன் நிறுவன மேலாளா் கைது!

அவிநாசி அருகே பனியன் நிறுவனத்தில் போலி கணக்கு காண்பித்து ரூ.11 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூா் காளம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிருபா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது!

அவிநாசியில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள டாஸ்மாக் கடை முன்பு அடையாளம் தெரியாத இருவா் சனிக்கிழமை இரவு தகராறில... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலைக் கிழித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, திருப்பூா் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் குடற்புழு நீக்க மாத்திரைகளை திங்கள்கிழமை வழங்கினாா். திருப்பூா் ... மேலும் பார்க்க