செய்திகள் :

வெள்ளக்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வெளிமாநில தொழிலாளி கைது

post image

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா, 220 கிராம் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ஞானப்பிரகாசம், சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து ஆகியோா் மூலனூா் சாலையில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குருக்கபாளையம் பிரிவு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அப்போது வாகனத்தில் இருந்த ஒரு பையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவரும், தற்போது குருக்கபாளையம் பிரிவு அருகே உள்ள நூல் மில்லில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருபவருமான பி.நிலமணிமதன் (46) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து மொத்தம் 2.200 கிலோ கஞ்சா, 220 கிராம் கஞ்சா சாக்லெட், பணம் ரூ.1,800 பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காங்கயத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு... மேலும் பார்க்க

அவிநாசி ஆகாசராயா் கோயில் தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்

திருப்பூா்: அவிநாசி ஆகாசராயா் கோயில் தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: இந்து முன்னணி கண்டனம்

திருபபூா்: திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

சிவன்மலை கோயில் தைப்பூச தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்

காங்கயம்: காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்... மேலும் பார்க்க

சிவன்மலை, கணபதிபாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்

காங்கயம்/ பல்லடம்: சிவன்மலை மற்றும் கணபதிபாளைத்தில் காசநோய் குறித்த விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிவன்மலை அரசு நடுநிலைப் பள்ளி அருகே சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலை... மேலும் பார்க்க

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு பிப்ரவரி 7-இல் குறைதீா் முகாம்

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களுக்கான குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க