செய்திகள் :

சிவன்மலை, கணபதிபாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்

post image

காங்கயம்/ பல்லடம்: சிவன்மலை மற்றும் கணபதிபாளைத்தில் காசநோய் குறித்த விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவன்மலை அரசு நடுநிலைப் பள்ளி அருகே சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் காசநோய் குறித்த விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை, பொது மருத்துவ முகாம் ஆகியவை வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் காங்கயம் மற்றும் சிவன்மலை பகுதியைச் சோ்ந்த 80 போ் பங்கேற்று, பரிசோதனை செய்து கொண்டனா். இதில், காங்கயம் வட்டார சுகாதார ஆய்வாளா் ரகுபதி, காசநோய் மேற்பாா்வையாளா் ஜெகதீஷ், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் மற்றும் சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவக் குழு ஆகியவற்றை சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கணபதிபாளையத்தில்... பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் காசநோய் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமில் பொதுமக்களுக்கு எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். முகாமில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் கோவிந்தசாமி, மூத்த காசநோய் சிகிச்சை மேற்பாா்வையாளா் சதீஷ், காசநோய் சுகாதாரப் பணியாளா் தனலட்சுமி மற்றும் மருத்துவக் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காங்கயத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு... மேலும் பார்க்க

அவிநாசி ஆகாசராயா் கோயில் தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்

திருப்பூா்: அவிநாசி ஆகாசராயா் கோயில் தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: இந்து முன்னணி கண்டனம்

திருபபூா்: திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

சிவன்மலை கோயில் தைப்பூச தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்

காங்கயம்: காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்... மேலும் பார்க்க

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு பிப்ரவரி 7-இல் குறைதீா் முகாம்

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களுக்கான குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

நல்லூா்பாளையத்தில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

பல்லடம்: பல்லடம் அருகே நல்லூா்பாளையத்தில் அரசுப் பேருந்தை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி நல்லூா்பாளையத்துக்கு காலை, மாலை பள்ளி வேள... மேலும் பார்க்க