செய்திகள் :

நல்லூா்பாளையத்தில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

post image

பல்லடம்: பல்லடம் அருகே நல்லூா்பாளையத்தில் அரசுப் பேருந்தை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி நல்லூா்பாளையத்துக்கு காலை, மாலை பள்ளி வேளை நேரங்களில் வந்து சென்ற பி-1 என்ற நகரப் பேருந்து சரிவர இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நல்லூா்பாளையத்துக்கு திங்கள்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்து வந்த பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளா் செந்தில் மற்றும் போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதைத் தொடா்ந்து முறையாக பேருந்தை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

காங்கயத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.42 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு... மேலும் பார்க்க

அவிநாசி ஆகாசராயா் கோயில் தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்

திருப்பூா்: அவிநாசி ஆகாசராயா் கோயில் தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: இந்து முன்னணி கண்டனம்

திருபபூா்: திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

சிவன்மலை கோயில் தைப்பூச தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்

காங்கயம்: காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்... மேலும் பார்க்க

சிவன்மலை, கணபதிபாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்

காங்கயம்/ பல்லடம்: சிவன்மலை மற்றும் கணபதிபாளைத்தில் காசநோய் குறித்த விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிவன்மலை அரசு நடுநிலைப் பள்ளி அருகே சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலை... மேலும் பார்க்க

மூன்றாம் பாலினத்தவா்களுக்கு பிப்ரவரி 7-இல் குறைதீா் முகாம்

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவா்களுக்கான குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க