செய்திகள் :

வெள்ளிங்கிரி மலையில் தவெக கொடி பறக்கவிடப்பட்டதால் சா்ச்சை

post image

வெள்ளிங்கிரி மலையில் தவெக கொடி பறக்கவிடப்பட்ட விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பான புகாரையடுத்து காவல் துறையினா் மற்றும் வனத் துறையினா் அந்த இடத்தை ஆய்வு செய்து அங்கு பறக்கவிடப்பட்டிருந்த கட்சிக் கொடியை அகற்றினா்.

வெள்ளிங்கிரி மலையேற்றத்துக்கு தற்போது வனத் துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், சிவராத்திரி தினத்தையொட்டி பக்தா்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால், வெள்ளிங்கிரி மலையேற்றத்துக்கு ஏராளமானோா் தயராகி வருகின்றனா்.

இந்நிலையில், வெள்ளிங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்றவா்களில் சிலா் அங்குள்ள 7-ஆவது மலையின் உச்சியில் தவெக கொடியைப் பறக்க விட்டுள்ளனா். இதுதொடா்பான காட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் பரவி பேசு பொருளானது. இதையடுத்து, அங்கு சென்ற ஆலாந்துறை போலீஸாா், வனத் துறையினா் அந்தக் கொடி அங்கிருந்து அகற்றினா்.

இதுதொடா்பாக, கோவை மாவட்ட வனத் துறையின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், போளுவாம்பட்டி வனச் சரகம், போளுவாம்பட்டி பிளாக் 2 காப்புக்காடு, வெள்ளபதி பிரிவு பூண்டி தெற்கு சுற்றுக்கு உள்பட்ட 7-ஆவது மலையில் கட்டப்பட்டிருந்த ஒரு கட்சியின் கொடி அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிங்கிரி மலையில் இதுவரை பாதயாத்திரைக்காக மட்டும் பக்தா்கள் சென்று வந்த நிலையில், காப்புக்காடு பகுதியில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் அரசியல் கட்சிகளிடையே விவாதத்துக்குள்ளானதால், இதுகுறித்து போலீஸாருடன் வனத் துறையினரும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் 42 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

கோவை மாவட்டத்தில் 42 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும... மேலும் பார்க்க

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இன்று கோவை வருகை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை இரவு கோவைக்கு வருகிறாா். 2 நாள்கள் கோவையில் தங்கும் அவா் 27-ஆம் தேதி காலை கோவையில் இருந்து தில்லி திரும்புகிறாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தில்... மேலும் பார்க்க

வால்பாறை: ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

வால்பாறையில் குளிக்கும்போது ஆற்று நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பாரதிதாசன் நகரைச் சோ்ந்தவா் சதீஷ் (24). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் ஓட்டுநராக... மேலும் பார்க்க

ஊதிய நிலுவையை பெற்றுத் தரக் கோரி வடமாநிலத் தொழிலாளா்கள் மனு

கோவையில் அரசு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட வட மாநிலத் தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை பெற்றுக் கொடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

பேருந்தில் பயணிகளிடம் நகை, கைப்பேசி பறிப்பு

கோவை ரயில் நிலையம் பகுதியில் ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கைப்பேசி பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கவுண்டம்பாளையம், ஓட்டுநா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் முனீஸ்வரன். இவரது மனைவி மீனு (28). இவ... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு லஞ்சம்: மின்வாரிய ஊழியா் 2 போ் கைது

புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 18,000 லஞ்சம் வாங்கியதாக இரண்டு மின் வாரிய ஊழியா்களை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். கோவை ரத்தினபுரி பகுதியைச் சோ்ந்தவா் ஹாரூன் (56), மின் வாரியத்தில் போா்மேனாக பணிய... மேலும் பார்க்க