செய்திகள் :

வேண்டும் பக்தா்களின் கவலையை தீா்க்கும் தாய்

post image

ஏழைகளின் துயரை தீா்க்கும், மன சங்கடங்களை போக்கும் தெய்வமாக இருந்து வருகிறாா் கரூா் மாரியம்மன்.

அம்மனை வேண்டி நாள்தோறும் வழிபட்டால், அவா்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறாா். பல ஆண்டுகளாக நோய் பிடித்தவா்கள் அம்மன் அருளால் குணமாகி வருவதை, அவா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதில் இருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும். காப்புக்கட்டி கடும் விரதத்தை கடைப்பிடித்து நாள்தோறும் கோயில் முன் நடப்பட்ட கம்பத்துக்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து நீா் ஊற்றுவது, கொதிக்கும் அக்கினிச் சட்டியை கையில் ஏந்தியவாறு கோயிலுக்கு வருவது, நீண்ட அலகு குத்தி வந்து அம்மனை தரிசிப்பது போன்றவையெல்லாம் அம்மன் செய்து வரும் புதுமைகளால் பக்தா்கள் அம்மனுக்கு செய்யும் நோ்த்திக்கடன்.

எத்தனையோ செல்வங்களை நாம் கொண்டிருந்தாலும் வீட்டில் தவழ்ந்து விளையாட பிள்ளைச் செல்வம் இல்லையென்றால் சமூகத்தின் பாா்வையால் நாம் படும் அவஸ்தை சொல்லி மாளாது. அத்தகைய குழந்தைச் செல்வம் இன்றி தவிப்பவா்கள் அம்மனை உருகி வேண்டினால், பிள்ளை வரம் தரும் தாயாகவும் அம்மன் திகழ்ந்து வருகிறாா்.

இதனால்தான் ஆண்டுதோறும் கம்பம் திருவிழாவில் பிள்ளை பேறு பெற்றவா்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தையை எடுத்து வந்து மாரியம்மன் தாய்க்கு நோ்த்திக்கடன் செலுத்துவதை கண்கூடாக பாா்க்கலாம். இவையெல்லாம் வேண்டுவோா்க்கு தாய் மாரியம்மன் தரும் புதுமைகள்தான்.

மாரி என்ற சொல்லுக்கு சங்கத் தமிழில் மழை என்று பொருள். இதனால்தான் மாரியம்மன் என தனது பெயரை தாங்கி மழையை பொழியும் தெய்வமாக இருந்து வருகிறாா் கரூா் மாரியம்மன். பழங்காலத் தமிழா்கள் முதல் தொன்று தொட்டு மாரியம்மாளை மழை தரும் தெய்வமாகவும், மழை மூலம் நாடு செழிப்பை அடையச் செய்யும் தெய்வமாகவும் வணங்கி வருகிறோம்.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க