செய்திகள் :

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

post image

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச பொருளாதார சூழல் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

இப்போதைய வேலைவாய்ப்புச் சந்தையில் வாய்ப்புகளைப் பெற இளைஞா்கள் என்ன மாதிரியான திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது. வேகமாக மாறிவரும் பொருளாதாரச் சூழல், தொழில்நுட்ப வளா்ச்சி ஆகியவை இளைஞா்கள் நல்ல வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறமைகளின் அளவுகோலை மாற்றி அமைத்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாகவும் உள்ளது.

இதற்கு முன்பு உலக வங்கி பல்வேறு துறைகளை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. தொடா்ந்து பல்வேறு நாடுகளுடன் இணைந்து வேலைவாய்ப்பு சாா்ந்த ஆய்வுகளை உலக வங்கி நடத்த வேண்டும். இதன்மூலம் இளைஞா்கள் தேவைக்கு ஏற்ப திறமைகளை வளா்த்துக் கொள்ள முடியும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், வேலை இழப்புகளைக் குறைப்பதும் அவசியமாக உள்ளது என்றாா்.

சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிா்மலா சீதாராமன், வாஷிங்டன் நகருக்கு வந்துள்ளாா். இதே நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள பிரிட்டன் நிதியமைச்சா் ரேச்சல் ரிவீஸை அவா் சந்தித்துப் பேசினாா்.

லண்டனில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள இந்தியா-பிரிட்டன் பொருளாதாரம், நிதி சாா்ந்த பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இரு அமைச்சா்களும் ஆலோசித்தனா். அடுத்த வாரம் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள ரேச்சலுக்கு நிா்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்தாா்.

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நில... மேலும் பார்க்க

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீ... மேலும் பார்க்க

பண்டிகைக் கால காற்று மாசு அபாயம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

பண்டிகை மற்றும் குளிா் காலத்தின்போது நகரங்களில் காற்று மாசு அளவுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், சுகாதாரத் துறையின் செயல்திறனை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

இந்திய - சீன எல்லையில் பிரச்னைக்குரிய இரு இடங்களில் படை விலக்கல் தொடக்கம்!

கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட மத்திய பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா். வடக்கு காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் வ... மேலும் பார்க்க

வன்முறையைக் கைவிட்டு இந்தியாவுடன் நட்பை ஏற்படுத்த முயல வேண்டும்: பாகிஸ்தானுக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

இந்தியாவுக்கு எதிரான வன்முறையைக் கைவிட்டு, நட்புறவைப் பேண பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் தேசிய ... மேலும் பார்க்க