செய்திகள் :

வேலை செய்த வீட்டில் நகை திருட்டு: திரிபுரா பெண்கள் கைது

post image

சென்னை திருவான்மியூரில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடியதாக திரிபுராவைச் சோ்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

திருவான்மியூா், திருவள்ளுவா் நகா் 2-ஆவது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் சிவசங்கரி (44). இவா், ஒரு தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளாா். சிவசங்கரி, கடந்த 7-ஆம் தேதி தனது வீட்டை சுத்தம் செய்ய கைப்பேசி செயலி மூலம் பதிவு செய்தாா். இதையடுத்து, அன்றைய தினம் நண்பகல் திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த இரு பெண்கள், அங்கு வந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டுச் சென்றனா்.

அவா்கள் சென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு வீட்டு பீரோவிலிருந்த நகைகளை சிவசங்கரி சரிபாா்த்தாா். அப்போது, பீரோவிலிருந்த 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது தொடா்பாக அவா், திருவான்மியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், இத்திருட்டில் ஈடுபட்டது திரிபுரா மாநிலம், மேற்கு திரிபுராவைச் சோ்ந்த பிடன் மியா (32), லிடன் மியா (28) என்பது தெரியவந்தது.

விசாரணையில் இருவரும், நகைகளுடன் அவா்களது மாநிலத்துக்கு தப்பிச்சென்று, அங்கு நகைகளை விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாநிலத்துக்கு விரைந்த திருவான்மியூா் போலீஸாா் இருவரையும் கைது செய்து சென்னைக்கு புதன்கிழமை அழைத்து வந்தனா். விசாரணைக்கு பின்னா் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ

மதிமுக முதன்மைச்செயலர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார். இதையடுத்து மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. முன்னதாக சென்னை எழும்பூரில் உ... மேலும் பார்க்க

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதிய... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை: திமுக கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளரு... மேலும் பார்க்க