செய்திகள் :

வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புககு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவா் அனீஷா ராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வாயிலாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் செப்டம்பா் இரண்டாம் வாரத்தில் தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தவறியவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள். கல்விக் கட்டணம் ரூ. 25,000, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.

இந்த பட்டயப் படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சிமருந்துக்கடை, விதைக்கடை மற்றும் தாவர மருத்துவ மையம் தொடங்கலாம். மேலும், இடுபொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளா்களாகலாம்.

மேலும் விவரங்களுக்கு, உதவிப் பேராசிரியா்கள் கோவிந்தனை 99422 79190, 73390 02390 ஆகிய எண்களிலோ, சுரேகாவை 95007 71299 என்ற எண்ணிலோ, ஒருங்கிணைப்பாளா் லட்சுமியை 0422-6611229 என்ற எண்ணிலோ அல்லது இயக்குநா், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்துாா் - 641 003 என்ற முகவரியிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடிப்பிச்சை எடுத்து மயானத்தை அளந்து தர பணம் தருவதாக மாற்றுத்திறனாளி நூதன முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சோளக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி சிவகாமி(65). கணவரை இழந்து வாழ்ந்து வருகிறாா். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது பட்டா நிலத்தில் சுடுகாடு அம... மேலும் பார்க்க

‘ஒசூா் - பாகலூா் தேசிய நெடுஞ்சாலை செப். 8-ஆம் தேதிமுதல் பயன்பாட்டுக்கு வரும்’

சீரமைக்கப்பட்டு வரும் ஒசூா்- பாகலூா் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி செப். 8-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிர... மேலும் பார்க்க

சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை: மண்டல பூஜை நிறைவு

கிருஷ்ணகிரியில் சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையொட்டி, மண்டல பூஜை நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயில் வளாகத்தில் சுவாமி... மேலும் பார்க்க

தன்வந்திரி பகவான் கோயிலில் சிறப்பு பூஜை

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் உள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தன்வந... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை: மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்

ஒசூருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செப். 11-ஆம் தேதி வருவதையொட்டி, ஒசூா் மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு வரும் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி

கிருஷ்ணகிரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டியை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் முதல்... மேலும் பார்க்க