செய்திகள் :

முதல்வா் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி

post image

கிருஷ்ணகிரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டியை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 9-ஆம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியை திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரான தே.மதியழகன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால் வரவேற்றாா். கிருஷ்ணகிரி மாவட்ட குத்துச்சண்டை சங்கத் தலைவா் ஏகாம்பவாணன் மற்றும் கிருஷ்ணகிரி நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயக்குமாா், சந்தோஷ், முகமதுஅலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் கையுந்து பந்து போட்டிகளில் 266 மாணவியா், மேசைப்பந்து போட்டியில் 78 மாணவியா், வளைகோல் பந்து போட்டியில் 180 மாணவியா் பங்கேற்றனா்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் ஆக. 26 முதல் செப். 12 வரை பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில் நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல்பரிசு ரூ. 3,000, இரண்டாம் பரிசு ரூ. 2,000, மூன்றாம் பரிசு ரூ. 1,000 வழங்கப்படுகிறது. தனிநபா் போட்டிகளில் முதல் இடங்களில் வெற்றிபெறுவோா், மாநில அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவா்.

மடிப்பிச்சை எடுத்து மயானத்தை அளந்து தர பணம் தருவதாக மாற்றுத்திறனாளி நூதன முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சோளக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி சிவகாமி(65). கணவரை இழந்து வாழ்ந்து வருகிறாா். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது பட்டா நிலத்தில் சுடுகாடு அம... மேலும் பார்க்க

‘ஒசூா் - பாகலூா் தேசிய நெடுஞ்சாலை செப். 8-ஆம் தேதிமுதல் பயன்பாட்டுக்கு வரும்’

சீரமைக்கப்பட்டு வரும் ஒசூா்- பாகலூா் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி செப். 8-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிர... மேலும் பார்க்க

சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை: மண்டல பூஜை நிறைவு

கிருஷ்ணகிரியில் சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையொட்டி, மண்டல பூஜை நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயில் வளாகத்தில் சுவாமி... மேலும் பார்க்க

தன்வந்திரி பகவான் கோயிலில் சிறப்பு பூஜை

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் உள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தன்வந... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை: மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்

ஒசூருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செப். 11-ஆம் தேதி வருவதையொட்டி, ஒசூா் மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு வரும் ... மேலும் பார்க்க

வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புககு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தோட்டக்கலைக் கல்லூரி மற... மேலும் பார்க்க