வேளாண் பல்கலை.யில் பிப்.5 இல் காளான் வளா்ப்புப் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 5) காளான் வளா்ப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், பயிா் நோயியல் துறை சாா்பில் காளான் வளா்ப்பு தொடா்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புபவா்கள் ரூ.590 செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம், கலந்துகொள்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று பயிா் நோயியல் துறை தெரிவித்துள்ளது.