செய்திகள் :

அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: 3 பேர் கைது

post image

அயோத்தியில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண் காணாமல் போனதாக பெற்றோா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய கிராமத்துக்கு அருகே உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து அவருடைய உடல் மீட்கப்பட்டதாக போலீஸாா் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

‘எங்களது மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாா். அவருடைய உடலில் ஆழமான காயங்களும், எழும்பு முறிவும் ஏற்பட்டிருந்ததோடு, அவருடைய இரு கண்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன.

சிறைச்சாலையில் கோழிப்பண்ணை! கைதிகளுக்கு கோழிக்கறி! அரசுக்கு ரூ.10 கோடி மிச்சம்!!

இந்த விவகாரத்தில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று அந்த இளம்பெண்ணின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், மாநிலத்தில் தலித் விரோத ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மரத்தடியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

தலைநகர் தில்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடியுள்ளார். தில்லி தேர்தல் நடைபெற இரண்டு நாள்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகின்றது. மொத்தம... மேலும் பார்க்க

யமுனை நீரைக் குடியுங்கள், மருத்துவமனையில் சந்திக்கிறேன்: கேஜரிவாலுக்கு ராகுல் சவால்

தில்லியில் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் யமுனையை சுத்தமாக்கிக் காட்டுகிறேன் என்று கூறியிருந்தார் அரவிந்த் கேஜரிவால், ஆனால் இன்னமும் அது அசுத்தமாகவே இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட... மேலும் பார்க்க

கும்பமேளா பக்தா்களின் பாதுகாப்பு தொடர்பான பொதுநல மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது பக்தா்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததையடுத்து, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்த வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொத... மேலும் பார்க்க

இன்று மாலையுடன் ஓய்கிறது தில்லி பிரசாரம்!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. தலைநகர் தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு பிப்.5ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த த... மேலும் பார்க்க

புதிய வருமான வரி மசோதா: தொழில்துறையினரிடம் ஆலோசனை கோரல்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் புதிய வருமான வரி மசோதா குறித்து தொழில்துறையினர் தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பார்க்க

வசந்த பஞ்சமி: சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது பூக்கள் தூவி வரவேற்பு!

வசந்த பஞ்சமியான இன்று பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் மக... மேலும் பார்க்க